கொல்கத்தா, மார்ச் 3- ஹவுராவில் திரிணாமுல் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவர் தலைவர் அனீஷ்கானின் கொலை யாளிகளை உடனடியாகக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்; இதற்காக நீதி கேட்டுப் போராடிய வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி உட்பட 16 தோழர் களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்; உள்ளாட்சித் தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய முறை கேடுகளின் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கொல்கத்தாவில் இடது முன்னணி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் மார்ச் 28-29 தேதிகளில் தொ ழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத் தத்தில் உழைப்பாளி மக்கள் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தனர். அனீஷ்கான் கொலையைக் கண்டி த்து நந்திகிராமிலும் பேரணி நடைபெற்றது. கொல்கத்தா வில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் சார்பிலும் பேரணி நடைபெற்றது.