states

img

‘உணவு உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை!’

புதுதில்லி, ஏப்.7- ஏப்ரல் 2 முதல் 11-ஆம் தேதி வரை, வட மாநிலங்களிலுள்ள இந்துக்கள் நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். ஆகையால் இந்த 9 நாட்களும் உ.பி. உட்பட பாஜக ஆளும் பல்வேறு மாநி லங்களில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று தடாலடியாக உத்தர விடப்பட்டுள்ளது. தில்லியில் பாஜக ஆட்சியில் இல்லா விட்டாலும், அந்தக் கட்சியின் தலைமை யிலுள்ள தில்லி கிழக்கு மற்றும் தெற்கு மாநகராட்சி மேயர்களும் தன்னிச்சையாக இறைச்சிக் கடைகளுக்கு தடை விதித்துள்ளனர்.  “நவராத்திரி சமயத்தில் 99 சதவிகித மக்கள் பூண்டு, வெங்காயம் கூட சாப்பிடு வதில்லை. அவ்வாறிருக்கையில், நவ ராத்திரி விழாவின்போது கோவில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள் திறக்கப் பட்டால், அங்கிருந்து வரும் நாற்றம், இறைச்சிக் கழிவுகளை நாய்கள் தின்பது போன்றவற்றால், மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படும்” என்று பாஜகவின் தில்லி மேயர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக, தெற்கு தில்லி மேயர் முகேஷ் சூர்யன், “நவராத்திரி பண்டிகை யின் போது செயல்படாமல் இருக்க சம்மதித்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இறைச்சி கடைகள் நடத்த உரிமம் வழங்கப்படும். ஏப்ரல் 2 முதல் 11 வரை திறந்திருக்கும் இறைச்சி கடைகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்” என்று மிரட்டி யுள்ளார். இது தற்போது விவாதங்களை கிளப்பி யுள்ளது. பாஜக மேயர்களுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தில்லி மாநில துணைத் தலைவர் அபிஷேக் தத்தா அளித் துள்ள பேட்டியில், “இத்தகைய உத்த ரவை பிறப்பிக்க மாநகராட்சி ஆணை யரால் மட்டுமே முடியும். ஆனால் மேயர் இதனைக் கூறியிருப்பது ஊடக வெளிச்சம் பெறும் அல்லது அவரது தலைவர்களின் கவனம் பெறும் செயலைத் தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலை வர்களில் ஒருவரான சல்மான் நிஜாமி, “நவராத்திரியின் போது இறைச்சி விற்ப னையை மூட வேண்டும் என்றால், புனித ரமலான் காலத்தில் மதுவை ஏன் தடை செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். “நீங்கள் நவராத்திரியில் வெங்கா யம் அல்லது இறைச்சி சாப்பிடவில்லை என்றால் மற்றவர்களை ஏன் தடுக்க வேண்டும். இதுதான் ஜனநாயகமா? எங்கள் உணர்வுகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு என்ன மதிப்பு இருக்கி றது?” என்றும் கேட்டுள்ளார். “நவராத்திரி காலத்தில் இறைச்சி சாப்பிடுவதும் விற்பதும் ‘அரசியல மைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுள் ளது’” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் எம்.பி. மஹூவா மொய்த்ரா சுட்டிக் காட்டியுள்ளார். “நான் தெற்கு தில்லியில் வசிக்கிறேன்.  நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அரசிய லமைப்புச் சட்டமானது, கடைக்காரர் தனது வர்த்தகத்தை நடத்தும் சுதந்திரத்தை யும் அனுமதிக்கிறது. அப்படியிருக்கும் போது, இத்தகைய ஒரு முடிவை மாநக ராட்சி எவ்வாறு எடுக்கலாம்?” என்றும் மொய்த்ரா கேட்டுள்ளார். “ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் சூரிய  உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை உணவு உண்பதில்லை. அதற்காக, காஷ்மீ ரில் முஸ்லிம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றவர்களையும், அங்கு சுற்றுலா வருபவர்களையும் பொது இடங்களில் உணவு உண்ணக் கூடாது என தடை விதிக்கலாமா? பெரும்பான்மை தான் சரி என்று தெற்கு தில்லி நினைத் தால் அது ஜம்மு - காஷ்மீரிலும் சரியா கத்தானே இருக்க வேண்டும்!” என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கேட்டுள்ளார்.