பாட்னா, ஜூலை 4 - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் வெளியே உள் ளார். பாட்னாவில் உள்ள வீட் டில் தங்கியிருந்த அவருக்கு, ஞாயிற்றுக்கிழமையன்று மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் தோள்பட்டை யில் லேசான எலும்பு முறிவு மற்றும் முதுகில் காயம் ஏற் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனு மதிக்கப்பட்டுள்ளார்.