states

img

உக்ரைனில் மாணவர் நவீன் உயிரிழக்க ‘நீட்’ தேர்வே காரணம்!

பெங்களூரு, மார்ச் 3-  உக்ரைனில் நடந்த குண்டு வீச்சில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் பலியா னது, நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில், ‘‘வெளிநாடு களில் மருத்துவம் படிக்கும் இந்தி யர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination-FMGE) வெற்றி பெறுவதில்லை” என்று நாடா ளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசி யது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பின ரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் கர்நாடக முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி. குமார சாமியும் கண்டனம் தெரிவித்துள் ளார். டுவிட்டரில் இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ‘நீட்’-தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மருத்துவக் கல்வி படிக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவுகளை சிதைத்து வருகிறது. ‘நீட் தேர்வு’ பெற்றோர் மற்றும் மாணவர்களின் மரணச் சிலையாக மாறியுள்ளது.  தகுதி என்ற போர்வையில், திறமையான- ஆனால், பொருளா தார ரீதியாக நலிவடைந்த கிரா மப்புற மாணவர்களுக்கு- அநீதி இழைக்கும் ‘நீட்’ தேர்வின் வெட்கமற்ற முகத்தின் பிரதிபலிப்பே, உக்ரைனில் ஷெல் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோக மான மரணம் ஆகும். நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சத விகிதமும், பியூசியில் 97 சதவிகித மும் தேர்ச்சி பெற்றுள்ளார். கிரா மப்புற மாணவர் இவ்வளவு அதிக சத விகிதத்தைப் பெறுவது எளிதானது அல்ல.

இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இந்தியாவில் மருத் துவ சீட் மறுக்கப்பட்ட பிறகு, நவீன் தனது கனவை நனவாக்கி மருத்து வராவதற்கு உக்ரைன் சென்றார். தற்போது, அவரின் மரணத்திற்கு யார் பொறுப்பு? நீட் தேர்வுக்குப் பிறகு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மருத்து வக் கல்வி கனவாகி விட்டது. டுடோரி யல்கள் தங்கள் சந்தையை விரிவு படுத்தி, நவீன் போன்ற மாண வர்களின் சடலங்களில் நடனமாடு கின்றன. நவீன் மரணம் நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறி யாக்கியுள்ளது. ஏழைகளின் ரத் தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம். வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90 சதவிகித மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி யின் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கருத்து நீட் தேர்வுப் பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு ஒன்றிய அரசு ரகசிய ஆதரவோ? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இவ்வாறு குமாரசாமி குறிப் பிட்டுள்ளார்.