states

img

சட்ட அமைச்சரை மாற்றியது மோடி அரசு டம்மி ஆனார் கிரண் ரிஜிஜூ

புதுதில்லி, மே 18 - கிரண் ரிஜிஜூ-விடமிருந்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. மோடி அரசு அவருக்கு புவி அறிவியல் துறையை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை  அமைச்சர் அமித்ஷாவுக்கு அடுத்தபடி யாக அதிகாரத்துடன் வலம் வருபவராக அறி யப்பட்டவர் கிரண் ரிஜிஜூ. அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக ரிஜிஜூ, 2019-ஆம் ஆண்டு பாஜக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சராக இருந்து  வந்த நிலையில், அவரிடமிருந்த துறை 2021 ஜூலையில், கிரண் ரிஜிஜூ-வுக்கு வழங்கப்பட்டது. அப்போது முதலே, அதிகார மமதையுடனும், கடுமையான ஆணவத்துடன் நடந்து கொள்பவராக ரிஜிஜூ இருந்து வந்தார். குறிப்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்புடன் தொடர்ச்சியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார்.

கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் கே.எம். ஜோசப், எஸ். முரளிதர்,  வழக்கறிஞர்கள் ஆர். ஜான் சத்தியன், சோமசேகர் சுந்தரேசன், சவுரவ் கிர்பால், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் உள்ளிட் டோரின் நியமனங்கள் ஒன்றிய அரசால் மறுதலிக்கப்பட்டன. 2022 நவம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரண் ரிஜிஜூ, “கொலீஜியம் முறை  திருப்திகரமாக இல்லை என நாட்டு மக்கள் கருதுகின்றனர்; அரசமைப்புச் சட்டக் கூறு களின்படி, நீதிபதிகளை நியமிப்பது அரசின் பணியே ஆகும். அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும்போது, நியமனத்துக்கு முன் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் அறிக்கை பெற்று முடிவு எடுக்கும். ஆனால், நீதித்துறையோ, நீதிபதிகளோ இதைச் செய்ய முடியாது. உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நிய மித்து வருகிறது; இந்தியாவில்தான் நீதிபதி களே நீதிபதிகளை நியமித்துக்கொள்கின்ற னர்” என்று காட்டமாக பேசினார்.

அந்தாண்டு, நீதிபதிகள் பதவிக்கு கொலீஜியம் பரிந்துரை செய்த 11 பேரின் நியமனத்தை கிரண் ரிஜிஜூ நிறுத்தி வைத்தார். இதையடுத்து, கொலீஜியம் ஒரு வரை இரண்டாவது முறையாக பரிந்துரைத்துவிட்டால், 3 அல்லது 4 வாரங்களுக்குள் அவர்களை நியமித்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு  விதித்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டிலும் 20 நியமனங்களை நிறுத்தி வைத்தார்.  இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்த போது, “5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதற்கு, கொலீஜியம் அமைப்பே கார ணம்” என்று பழிபோட்டார். “நீதிபதிகள் நியமனத்திற்கு புதிய அமைப்பை உரு வாக்கும் வரை இந்தப் பிரச்சனை இப் படியே தொடரும்” என்றும் நீதிபதிகளை மிரட்டினார்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேச விரோத சக்திகளுடன் தொடர்பில் இருப்பதாக அவதூறு சுமத்தினார். இந்நிலையில் நீதித்துறை மற்றும் கொலீஜியம் குறித்து விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  மற்றும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு  ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜூ நீக்கப்பட்டு, புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். கிரண்  ரிஜிஜூ-விற்கு புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில் பழைய அதே ஈடுபாடு மற்றும் உத்வேகத்துடன் புவி அறிவியல் அமைச்சராக பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வையை நிறைவேற்ற உழைப்பேன் என ரிஜிஜு கூறியுள்ளார்.