திருவனந்தபுரம், மார்ச் 9- கடலோர மக்களுக்கு பாதுகாப்பாக மறுவாழ்வு அளிக்கும் பெரும் குறிக் கோளுடன் அரசு முன்னேறி வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மீனவர்கள் நாட்டின் சொந்த ராணுவம் எனவும், ரூ.2,450 கோடி மதிப்பிலான மறுவாழ்வுத் திட்டம் அவர்களது குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 250 வீடுகளுக்கான சாவி களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை யை வாழ வேண்டும். அதற்கு அந்தக் குடும்பங்களை தகுதியடையச் செய்வத ற்கான நாட்டிலேயே முதலாவது மறு வாழ்வுத் திட்டம் இது. வளர்ந்த சமுதா யம் என்ற இலக்கை நோக்கி கேரளா நகர்கிறது. கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட லைப் மிஷன் தேசிய கவனத்தைப் பெற்றுள்ளது. ஐந்தரை ஆண்டுகளில் லைப் மிஷன் மூலம் 2.75 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்பட்ட 250 வீடுகள் மட்டுமல்லாமல், இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களுக்கு 276 வீட்டுத் தொகுதிகளையும் 308 தனிநபர் வீடுகளையும் வழங்கியுள்ளது. 18,685 குடும்பங்கள் மறுவாழ்வுப் பய னாளிகள். இதில் 8,157 பேர் கடற்கரை யிலிருந்து இடம்பெயர முன்வந்தனர். அவர்களில் 2982 பேருக்கான நிலம் கண்டறியப்பட்டது. 1109 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள் ளன. 898 குடியிருப்புகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இவற்றின் கட்டுமான பணியும் நடந்து வருகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் கொல்லத்தில் உள்ள குடியிருப்பு கள் கட்டுமானப்பணிகள் ஒப்படைக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.