பெங்களூரு, ஏப். 15 - கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, 40 சதவிகிதம் கமிஷன் கேட்டதால், காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் (40) மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் ஈஸ்வரப்பா மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் தங்களிடம் கமிஷன் பெறும் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரின் பெயர்ப்பட்டியலை யும் வெளியிடுவோம் என்று காண்டிராக்டர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக காண்டிராக்டர் சங்கத் தலைவர் கெம்பண்ணா, செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக மேலும் கூறியிருப்ப தாவது: “ஒவ்வொரு அரசு காண்டிராக்ட் மீதும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் கமிஷன் வாங்குகின்றனர். கர்நாடகத்தில், நீர்வளம், பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய துறைகள்தான் மிகவும் அதிகமான ஊழல் மலிந்த துறைகளாக உள்ளன.
அந்த வகையில், காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கு காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான். அவர்மீது கடுமையான நட வடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அடுத்த 3 அல்லது 4 நாட்களில், அதிக அளவில் கமிஷன் பெறும் நான்கைந்து அமைச்சர்கள் மற்றும் 10 முதல் 15 எம்எல்ஏ-க்களின் பெயர்களை வெளியிடுவோம். இது ஒரு பொது ஆவணமாக- பகிரங்கமாக இருக்கும். ஏற்கெனவே, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகியோரிடம் மனு அளித்தும் கூட, மாநிலத்தில் ஆழ மாக வேரூன்றியிருக்கும் ஊழ லுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த லஞ்ச - ஊழல் விவகாரங்கள் குறித்து, விசார ணை நடத்துவதற்கு சுயேட்சை யான அமைப்பொன்றை நியமிக்கு மாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, அடுத்த மாதம் மாபெரும் போராட் டம் ஒன்றை நடத்துவதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது. மே 25 முதல் ஒரு மாதத்திற்கு அனைத்து அரசுப் பணிகளை நிறுத்தவும் கர்நா டக காண்டிராக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு கெம்பண்ணா கூறியுள்ளார்.