உஜ்ஜைனி, ஜன.19- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லிம் ஆண் மற்றும் இந்துப் பெண் மீது பஜ்ரங் தள் குண்டர் கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ஏதோ குற்றவாளிகளைப் போல அவர்களை ரயிலிலிருந்து இறக்கி விட்டு, காவல்நிலையத்திற் கும் இழுத்துச் சென்றுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில், அஜ்மீர் செல்லும் ரயில் பெட்டி யில் ஒரு முஸ்லிம் ஆணும், திருமண மான இந்துப் பெண்ணும் பேசிக் கொண்டே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் இருவரின் விவரங்களையும் விசா ரித்து, அவர்களாகவே காதலர்கள் என்று முத்திரை குத்தி, தாக்குத லில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை வலுக் காட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, ‘லவ் ஜிகாத்’ குற்றச் சாட்டை முன்வைத்து உஜ்ஜைனி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்ப டைத்துள்ளனர்.
விசாரணையில், அந்த முஸ்லிம் ஆண், சிறிய எலக்ட்ரானிக் கடை யின் உரிமையாளர் ஆசிப் ஷேக் எனவும், அந்தப் பெண் ஒரு தனி யார் பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வரும்வரை காவல் நிலையத்தி லேயே அமர வைத்துள்ளனர். ஜனவரி 14 அன்று இந்த சம்ப வம் நடந்துள்ளது. எனினும் இது தொடர்பான வீடியோ வெளியான பிறகே, நடந்த உண்மைகள் தற் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஜ்ரங் தள் தொண்டர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட மூன்று பேர், இளைஞர் ஷேக்-கை ரயில் பெட்டியில் இருந்து வெளியே இழுப்பதும், காவல் நிலையத்திற் குள் பதிவான மற்றொரு வீடியோ வில், சம்பந்தப்பட்ட இந்துப் பெண், “உங்கள் ஒரு தவறான புரிதல் என் வாழ்க்கையை கெடுத்துவிடும். நான் ஒரு வயது வந்தவள். நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறேன். நான் குழந்தை களுக்கு கற்பிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று கதறுவதும் பதிவாகியுள்ளது.