states

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பார்க்குமாறு மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் கர்நாடக கல்லூரி!

பெங்களூரு, மே 25 - விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா  சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர்  நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி  கேரளா ஸ்டோரி’. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப் படம் மே 5 அன்று திரைக்கு வந்தது. கேரளத்தைச் சேர்ந்த 4 பெண்  கள், கல்லூரி விடுதியில் ஒரே அறை யில் தங்குவதாகவும், அவர்களில் முஸ்லிமாக இருக்கும் ஒரு பெண், மற்றவர்களை மூளைச்சலவை செய்து, முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாகவும், பின்னர் அவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புக்காக சிரியா  போன்ற நாடுகளுக்கு கடத்தப்படு வதும்தான் இத்திரைப்படத்தின் மையக்கருத்தாகும். இவ்வாறு, கேரளத்தைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப் பட்டு இருப்பதாகவும் ஒரு பொய்யான பிரச்சாரத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ முன்வைத்தது. எனவே, இந்த படத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்கள் நடைபெற்றன. அரசி யல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

மறுபுறத்தில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.  கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பகி ரங்கமாக இந்த படத்தை ஆதரித்து விளம்பரம் செய்தார். இந்நிலையில், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டம் இல்கலில் உள்ளது ஸ்ரீ விஜய் மஹாந்தேஷ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, புதன்கிழமையன்று பிற்பகல் வகுப்பு களை நிறுத்தி விட்டு, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் பார்க்குமாறு அனைத்து மாணவிகளுக்கும் உத்தரவிட்டது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தை திரையிடுவது பற்றி,  கடந்த மே 23 அன்று இக்கல்லூரி யின் முதல்வர் டாக்டர் கே.சி. தாஸ்  அறிவிப்பு ஒன்றையும் வெளி யிட்டுள்ளார். அதில், “மே 24 அன்று ஸ்ரீநிவாஸ் டாக்கீஸில் மதியம் 12 மணி முதல் அனைத்து இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பி.ஏ.எம்.எஸ்) மாணவிகள் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  கல்லூரி மாணவிகள் திரைப்படத் தைப் பார்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில் பிற்பகல் வகுப்புகள் ரத்து  செய்யப்படுவதாகவும், எனவே அனைத்து மாணவிகளும் கட்டாயம் படத்தை பார்க்க வேண்டும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தற்போது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.