கேள்விக்கு பதிலளிக்காத மோடியின் ஆணவம்: கார்கே விமர்சனம்
“பிரதமர் நரேந்திர மோடி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. வேலைவாய்ப்பின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் பேசவில்லை. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதுகுறித்தும் பிற விவகாரங்கள் குறித்தும் பிரமதர் மோடி பேசவில்லை. அவரால் மட்டும்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் கூறி இருக்கிறார். இது ஆணவமான பேச்சு’’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
ஷிமோகா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயர்!
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் பெயரைச் சூட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். எடியூரப்பாவின் 80-ஆவது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 27 அன்று ஷிமோகா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், எடியூரப்பாவின் பங்களிப்புகளால்தான் விமான நிலையப் பணிகள் நிறைவேறியதாகவும், எனவே, விமான நிலையத்திற்கு எடியூரப்பாவின் பெயரைச் சூட்ட மாநில அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பதாகவும் பொம்மை தெரிவித்துள்ளார்.
உ.பி. விமான நிலையத்தில் 12 அடி உயர லட்சுமணன் சிலை
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்நிலையில், இந்த விமான நிலையத்தை, ‘ஜி20’ மாநாடு, ‘சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு’ ஆகியவற்றுக்காக அழகுபடுத்துகிறோம் என்று உ.பி. பாஜக அரசு வேலையைத் துவங்கியுள்ளது. இதனொரு பகுதியாக, விமான நிலையத்திற்கு வெளியே ராமாயணத்தில் ராமரின் தம்பியாக வரும் லட்சுமணனுக்கு 12 அடி உயரத்தில் சிலை நிறுவியுள்ளது. இந்தச் சிலையை முதல்வர் ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். லக்னோ தொகுதி எம்.பி.யும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு ‘பாரத ரத்னா’ விருது!?
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுர விக்க வேண்டும் என்று ம.பி. மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஜி.எஸ். தாமோா் நாடாளுமன்றத்தில் கோரி க்கை விடுத்துள்ளார். “பட்டி யல் வகுப்பினர், பழங்குடி யினர் என நாட்டின் அனை த்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் பிரதமர் மோடி பணியாற்றி வரு கிறார். சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை வெகு வாக உயர்த்தியுள்ளார். 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் செய்திராத பல சாதனைகளை அவர் படைத்து வருகிறார். எனவே, அவருக்கு நாட்டின் மிக உயரிய விரு தான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று தாமோர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ முன்னிலையில் காந்திக்கு இழிவு
பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பிப்ரவரி 5 அன்று விழா நடைபெற்றுள் ளது. விழாவிற்கு பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் தலைமை தாங்கியுள்ளார். அப்போது, மாணவன் ஒரு வர் மகாத்மா காந்தியை விமர்சிக்கும் கவிதை ஒன் றை வாசித்துள்ளார். “நாட்டுப் பிரிவினையின் போது காந்தி அமைதி காத்து குற்றம் இழைத்தார். ராட்டை சக்கரத்தை சுற்றி யவர்களால் மட்டும்தான் நாடு சுதந்திரம் கிடைத்தது என் றால், சுதந்திரத்திற்கு பாடு பட்டு தூக்கில் தொங்கியவ ர்கள் எல்லாம் யார்?” என் றெல்லாம் அந்த கவிதையின் வரிகள் இருந்துள்ளன. கவிதை வாசித்து முடித்ததும், அந்த சிறுவனை பாஜக எம்எல்ஏ கைதட்டி பாராட்டியுள்ளார்.
ஓபிசி கிரீமிலேயர் வரம்பை உயர்த்தும் திட்டம் இல்லை!
புதுதில்லி : இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓபிசி) ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மேல் உடைய வர்கள் கிரீமிலேயர் பிரிவில் வருகின்றனர். அவர்க ளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடஓதுக்கீடு சலுகைகள் வழங்கப்படாது. இதனால், கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரு கின்றன. இந்நிலையில் கிரீமிலேயர் வரம்பை ரூ. 8 லட்சத் தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த திட்டம் உள்ளதா என்று காங்கிரஸ் உறுப்பினர் தீன் குரியகோஸ் நாடாளு மன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பதிலில், “தற்போ துள்ள ரூ. 8 லட்சம் வரம்பே போதுமானது என்று ஒன்றிய அரசு கருதுகிறது. இதனால், இந்த வரம்பை உயர்த்தும் திட்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடுக்கு இடமில்லை: ரிஜிஜூ தகவல்
புதுதில்லி: ‘நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தி யக்கூறு குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்குமா?’ என திமுக உறுப்பினா் திருச்சி சிவா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தற்போதைய கொள்கை மற்றும் நடைமுறைகளின்படி இந்திய நீதித்துறையில் இட ஒதுக்கீடு நடைமுறை இல்லை. இருந்த போதிலும், நீதிபதி கள் நியமனத்துக்கான பெயா் பரிந்துரையை ஒன்றிய அரசு அனுப்பும்போது இந்திய நீதித் துறையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பெண்கள் உள்ளிட்ட பிற பிரிவினரை யும் கருத்தில் கொள்ளுமாறு நீதிபதிகளை குறிப்பாக கொலீஜியம் உறுப்பினர்களை ஏற்கெனவே நினைவு படுத்தி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்புக்காக பெண்களே அதிகம் காத்திருப்பு
சென்னை,பிப்.10- தமிழ்நாடு முழுவதும் 67 லட்சத் துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேர் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்துள்ளவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப் பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மொத்தம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 273 பேர்களும் பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு காத்திருப்பதாக அரசு தெரிவித் துள்ளது. இதில் 46 வயது முதல் 60 வரை வயது முதிர்வு பெற்றவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 155 பேர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்கள் மட்டும் மொத்தம் 29 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.
ஷர்மிகாவுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
சென்னை,பிப்.10- ‘ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும்’ என்பன போன்ற பல கருத்து களை மருத்துவர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து சித்த மருத்துவ கவுன் சிலில் நேரில் ஆஜராகி விளக்க மளித்த ஷர்மிகாவிடம் பிப்ரவரி 10 அன்று எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டி ருந்தது. இந்நிலையில் எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க ஷர்மி காவுக்கு கால அவகாசம் முடிவடை யும் நிலையில்,மேலும் அவகா சம் கோரியதை அடுத்து வரும் 24 தேதிக்குள் விளக்கம் அளிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை,பிப்.10- கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழ்நாடு முழு வதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனு மதி மறுக்கப்பட்டது. அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப் பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு காவல் துறையினர் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவை ரத்து செய்து உத்தர விட்டனர். மேலும், கடுமையான ஒழுங் குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
மாணவர்களுக்கு மிகப்பெரிய சமையல் போட்டி
சென்னை, பிப்.10- விருந்தோம்பல் துறை மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சமையல் போட்டி எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்ச் (எவரெஸ்ட் பிகேசிசி) நிகழ்வு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்றது. போட்டியின் பங்கேற்பாளர்கள் சமையல் திறமையில் தங்கள் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர், இந்நிகழ்ச்சியில், தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் டாக்டர் கே தாமோதரன், பிரபல செஃப் மற்றும் கின்னஸ் உலக சாதனை ஆசிரியர்; ஹரிஷ் ராவ், தமோக்னா சக்ரவர்த்தி, நிர்வாக செஃப் - ரெயின்ட்ரீ ஹோட்டல், சென்னை ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டனர். எவரெஸ்ட் பிகேசிசி என்பது வளரும் சமையல் கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியதோடு அவர்கள் தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும் சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது. பிப்ரவரி 17 மற்றும் 18, 2023 இல் மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனைத்து நகரங்களிலிருந்தும் வெற்றியாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
ஆன்லைன் திறனாய்வு தேர்வு
சென்னை, பிப்.10- பொது நுழைவு தேர்வு ஆர்வலர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான ஆன்லைன் திறனாய்வு தேர்வுகளை ட்ரையம்பண்ட் இன்ஸ்டிடி யூட் ஆப் மேனேஜ்மென்ட் எஜூகேஷன் நிறுவனம் ஞாயிறன்று (பிப். 12) நடத்தவுள்ளது. இந்தத் தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும் பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதா வது ஒன்றைத் தேர்வு செய்யலாம். தேர்வில் திறன் அளவு, தரவு விளக்கம் மற்றும் வாய்மொழி திறன், பொறியியல் பாடம் (அடிப்படை பாடங்கள்) என பல்வேறு தேர்வு கேள்விகளைக் கொண்டி ருக்கும்.
துருக்கி : பலி 21 ஆயிரம்
அங்காரா, பிப்.10- துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நில நடுக்கங்களில் பலியானவர்களின் எண்ணி க்கை 21 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பலி எண்ணிக்கை பற்றி ஏராளமான செய்திகள் வெளிவந்தாலும், அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 342 என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேவேளையில், உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயி ரத்தைத் தாண்டி விட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற் கான முயற்சிகள் பலனளிக்காமல் போய்விடும் என்ற அச்சத்தை நிர்வாகம் கூறியிருக்கிறது. துருக்கியில் மட்டும் நிலநடுக்கப் பாதிப்பால் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 242 ஆகும். இடிபாடுகளுக்கிடையில் சிக்கியவர்களில் 75 ஆயிரத்து 780 பேர் இதுவரையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். துருக்கியின் தெற்குப்பகுதியில் மக்களை மீட்கும் பணி இடைவிடாமல் நடைபெறுகிறது. இந்தப் பணியில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் ஈடுபட்டி ருக்கிறார்கள். சிரியாவைப் பொறுத்தவரையில், 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ள தாகவும், 5 ஆயிரம் பேர் காயமடைந்துள்ள தாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சிரியாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபை பெரும் முனைப்பை காட்டி வருகிறது. உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் நிவாரணப் பணிகள் பற்றி அனைவரும் காட்டிய ஒற்றுமை நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று ஐ.நா. பிரதிநிதி கெய்ர் பெடெர்சன் தெரிவித்துள்ளார்.