ராஞ்சி, நவ. 12 - ஜார்க்கண்ட் மாநிலத்தில், இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை 77 சதவிகிதமாக உயர்த்தி, அம்மாநில ஹேமந்த் சோரன் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இடஒதுக்கீடு உச்சவரம்பை 77 சதவிகிதமாக உயர்த்துவதற்கான ‘ஜார்க்கண்ட் அரசுப் பணி காலியிடங்கள் மற்றும் பணிகள் திருத்த மசோதா-2022’வை, ஹேமந்த் சோரன் அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அந்த எதிர்ப்பை யும் மீறி இடஒதுக்கீட்டை 77 சதவிகிதமாக உயர்த்தும் மசோதாவை ஹேமந்த் சோரன் அரசு நிறைவேற்றியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், பட்டியல் வகுப்பி னருக்கு 10 சதவிகிதம், பழங்குடியினருக்கு 26 சத விகிதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சத விகிதம், இடபிள்யூஎஸ் எனப்படும் உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் என மொத்தம் 4 பிரிவு களுக்கு 60 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறை யில் உள்ளது. இந்நிலையில், புதிதாக கொண்டு வரப் பட்டுள்ள திருத்த மசோதா மூலம், ஐந்தாவதாக ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (Extremely Back ward Classes -EBCs) என்ற பிரிவு உருவாக்கப் பட்டு- அந்தப் பிரிவுக்கு தனியாக 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பட்டி யல் வகுப்பினர் - பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும், தற்போதுள்ள அளவிலிருந்து தலா 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 12 சத விகிதமாகவும், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 28 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இதர பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அளவு மட்டும் முன்பிருந்த 14 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகி தமாக குறைக்கப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சி களைக் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றபோது மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்போம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. தற்போது அந்த வாக்குறுதியை ஹேமந்த் சோரன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது. முன்னதாக இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, இடஒதுக்கீடு விஷ யத்தில், ஹேமந்த் சோரன் அரசு தேவையற்ற அவ சரம் காட்டுவதாகவும், மசோதா மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கூறி பாஜக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், பாஜக-வினரின் எதிர்ப்பை முறியடித்து முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டப்பேரவையில் மசோ தாவை நிறைவேற்றினார்.
அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், “ஜார்க்கண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப் பட்டு வந்த 27 சதவிகித இடஒதுக்கீட்டை முந்தைய பாஜக அரசு 14 சதவிகிதமாக குறைத்தது. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களின் எதிர்காலத்து டன் பாஜக விளையாடியது. தற்போது அந்த கட்சி யின் சதிகளில் இருந்து ஜார்க்கண்ட் மக்களின் நல னைப் பாதுகாக்கும் கவசமாக இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார். தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சத விகித இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு இருப்பதுபோல, ஜார்க்கண்டில் கொண்டு வரப்பட்டுள்ள 77 சதவிகித இடஒதுக்கீட்டையும் 9-ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஹேமந்த் சோரன் அரசு இறங்கி யுள்ளது. அரசியல் சாசனத்தின் 9-ஆவது அட்ட வணையில் இந்த திருத்தச் சட்டம் இடம்பெற்ற பிறகு, இடஒதுக்கீடு அதிகரிப்பு அமலுக்கு வரும் என்று மசோதாவிலேயே ஜார்க்கண்ட் அரசு குறிப்பிட்டுள்ளது. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (30), காங்கிரஸ் (16), ராஷ்ட்டிரிய ஜனதாதளம் (1) கூட்டணி 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பாஜகவுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். பிற கட்சிகள், சுயேட்சைகள் 9 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.