“எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடிந் தது என்பதே நான் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்ததன் மிகப் பெரிய வெற்றி. மேற்கு வங் கத்தில் அரசியல் உறுதி, ஜனநாய கக் கலாச்சாரம், நிலச்சீர்திருத் தம், கிராமப் பொருளாதார வளர்ச்சி, மக்களிடையே மதவெறி க்கு எதிரான மனோபாவத்தை வளர்த்தது, தொழில்துறையிலும் இதர துறைகளிலும் பெற்ற வளர்ச்சிகள்...”- என 2000 ஆவது ஆண்டில் 87வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் பொறுப்பி லிருந்து விடைபெறுகிறபோது தமது ஆட்சியின் வெற்றி களை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பெருமிதப்பட்டார் ஜோதிபாசு.
நிலப்பிரபுக்களிடமிருந்து, நில உச்சவரம்புச் சட்டத்தி ற்கு மேல் உள்ள 13 இலட்சம் ஏக்கர் உபரி நிலங்களை எடுத்து நிலமற்ற 20 இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு வழங்கியது ஜோதிபாசுவின் இடதுமுன்னணி அரசு. நிலம் பெற்றவர்களில் 37 சதவீதம் பேர் தலித்மக்கள். 10 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அதிக அதிகா ரங்கள் பெறவும், மாநில சுயாட்சிக்காகவும் போராடியவர் ஜோதிபாசு. மாநில அதிகாரங்களில் மத்திய அரசு அத்து மீறித் தலையிடும்போதெல்லாம் மாநில உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுத்தார். வங்க மக்களால் “ஜோதிபாபு”என்று பிரியமுடன் அழைக் கப்படும் ஜோதிபாசுவின் 24 ஆண்டுகள் ஆட்சிக்காலம் வங்கத்தின் இரண்டாவது மறுமலர்ச்சிக் காலமாகத் திகழ்ந்தது.
இன்று (ஜன.17) தோழர் ஜோதிபாசு நினைவு நாள்