states

நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசு கூறிய உப்புச் சப்பில்லாத காரணங்களை பொதுவெளியில் போட்டு உடைத்த கொலீஜியம்!

புதுதில்லி, ஜன. 21 - பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்க ளை நீதிபதிகளாக நியமிக்க முடியாது என்ப தற்கு ஒன்றிய அரசு கூறியிருக்கும் கார ணங்களை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் முதன்முறையாக பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளது. இந்த 5 பேரை நீதிபதிகளாக நியமிக்க முடி யாது என்பதற்கு ஒன்றிய அரசின் சட்ட அமைச் சகம் கூறியிருக்கும் காரணங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை என்று கூறியிருக் கும் கொலீஜியம், அதே 5 பேரை மீண்டும் நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்து, அதிர்ச்சி அளித்துள்ளது.  பொதுவாக, கொலீஜியத்தின் பரிந்து ரையை அரசு ஏற்காத போது, அதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றத்திற்குத் தெரி விக்க வேண்டும். எனினும், அவ்வாறு கூறப் படும் காரணங்கள் எதுவானாலும், அவற்றை கொலீஜியம் வெளியே கூறாது. இதுதான் வழக்கமாக உள்ளது. 

ஆனால், நீதிபதிகள் நியமன விவகா ரத்தில் மோடி அரசு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதுடன், நேர்மை யான நீதிபதிகளின் நியமனத்திற்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வருவது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தையே கோப மூட்டி, பொதுவெளியில் கொதித்தெழ வைத்துள்ளது.  கடந்தாண்டில், உயர் நீதிமன்ற நீதிபதி கள் பதவிக்கு, கொலீஜியம் பரிந்துரை செய்து அனுப்பிய பெயர்களில், 20 பேரின் நிய மனத்தை நரேந்திர மோடி அரசு நிறுத்தி வைத்தது. எனினும் கொலீஜியம் தனது பரிந்துரைகளை பொறுமையாகவே, மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வலியுறுத்தி வந்தது. ஆனால், அந்தப் பொறு மையை மோடி அரசு புரிந்து கொண்டதாக இல்லை.

வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பாலை, தில்லி உயர் நீதிமன்றத்திற்கும், சோமசேக ரன் சுந்தரேசனை மும்பை உயர் நீதிமன் றத்திற்கும், ஜான் சத்யனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், அமிதேஷ் பானர்ஜி மற்றும் சக்யா சென் ஆகியோரை கொல் கத்தா உயர் நீதிமன்றத்திற்கும் கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. வழக்கம்போல இந்த பரிந்துரையையும் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் ஏற்க மறுத்து கொலீஜியத்திற்கே திருப்பி அனுப்பியது.  இதையடுத்தே, சவுரப் கிர்பால், சோம சேகரன் சுந்தரேசன், ஜான் சத்யன், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் ஆகிய 5 பேரை நீதி பதிகளாக நியமிக்க முடியாது என்று, அதற்கு  ஒன்றிய அரசு கூறியிருக்கும் காரணங்க ளை கொலீஜியம் பொதுவெளியில் கூறி, அந்தக் காரணங்களை நிராகரித்துள்ளது. இந்த 5 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஒன்றிய அரசின் சட்ட அமைச்ச கம் தெரிவித்துள்ள ஆட்சேபணைகளையும், அவற்றுக்கான தங்களின் பதில்களையும் தனித்தனியாக விலாவாரியாக கொலீஜியம் அளித்துள்ளது. 

கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப் பட்டும், ஒன்றிய பாஜக அரசால், நீதிபதி பதவி வழங்கப்படாமல் நீண்டகாலமாக வஞ்சிக்கப் பட்டு வருபவர் சவுரப் கிர்பால். உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.என். கிர்பாலின் மகன் ஆவார். தில்லியில் பள்ளிக் கல்வியை முடித்த சவுரப் கிர்பால், ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின் றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகத்தில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். 1990-களில் தாய்நாடு திரும்பிய அவர், இந்திய நீதிமன்றங்களில் திறமையான வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு, 2017 முதலே நீதிபதி பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. சவுரப் கிர்பாலை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்குமாறு, 2021-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனாலும், சவுரப் கிர்பாலுக்கு நீதிபதி பதவி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சவுரப் கிர்பால் தன்பாலின உறவாளர் என்பதா லேயே அவருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட வில்லை என்று செய்திகள் வெளியாகின. 

தன்பாலின உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தன்பாலின உறவு இந்தியாவில் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம், கடந்த 2018- ஆம் ஆண்டு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தன்பாலின ஈர்ப்பு அல்லது தன்பாலின உறவாளர்களான எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Transgen der, Queer -LGBTQ) சமூகத்துக்கான மிகப் பெரிய உரிமையாக இது கொண்டாடப் பட்டது. இந்த தீர்ப்பை வாதாடிப் பெற்றதில் சவுரப் கிர்பாலின் பங்கும் மிக முக்கியமா னது. தன்பாலின உறவு குற்றம் அல்ல என வழக்கு தொடர்ந்த 2 பேரின் சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் வாதாடியவர் சவுரப் கிர்பால் ஆவார்.  இந்நிலையில், தனக்கு நீதிபதி பதவி கிடைப்பதற்கு, தன்பாலின ஈர்ப்பாளர் என்ற அம்சமே எதிராக நிறுத்தப்பட்டபோது, அது பற்றி கிர்பால் பேசியிருந்தார். என்னுடன் வாழ்க்கை துணையாக இருக்கும் நபர் 20 ஆண்டுகளாக இருக்கிறார். ஆகையால் அவரை மையமாக வைத்து நீதிபதியாகும் தகுதி நிராகரிக்கப்படுகிறது என்பதை எல்லாம் நம்ப முடியவில்லை. மாறாக, என் பாலின ஈர்ப்பு உணர்வை மையமாக வைத்து தான் முடிவெடுக்கிறார்கள் என்று கூறியிருந் தார். எனினும், அது உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று கொலீஜியமே, இதுதான் ஒன்றிய அரசு கூறும் காரணம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன், ஒன்றிய அரசின் வாதத்திற்கு தனது பதிலையும் அளித்துள்ளது.

பாலின அடிப்படையில் ஒருவரின் தகுதியை தீர்மானிக்க முடியாது

கிர்பால் தன்பாலின உறவாளர். தன்பா லின உறவாளர்களின் உரிமைகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பவர். அவரது துணை சுவிஸ் நாட்டவர் என்றெல் லாம் சட்ட அமைச்சகம் கூறியிருக்கிறது. ஆனால், பாலின அடிப்படையில், ஒருவ ரின் வேட்புமனுவை நிராகரிப்பது அரசியல மைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சவுரப் கிர்பாலின் வாழ்க்கைத் துணை சுவிஸ் நாட்ட வர் என்பதால் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத் தல் என்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நாட்டின் மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் வாழ்க்கை துணைகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மூலம் எல்லாம் ஏற்படாத தேச பாதுகாப்புக்கான ஆபத்து சவுரப் கிர்பாலின் வாழ்க்கை துணை மூலம் மட்டும் எப்படி ஏற்படும்? எனவே, கிர்பாலை  நீதித்துறையில் சேர்ப்பது நீதிமன்ற அமர் வில் பன்முகத்தன்மையை சேர்க்கும். அவரது திறமை, நேர்மை மற்றும் புத்திசாலித்தனம் இந்திய நீதித்துறைக்குப் பயன்படும்.

அரசியலமைப்பு பதவி வகிக்க, தகுதியும் ஒருமைப்பாடும் போதும்..

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ள சோமசேகர் சுந்தரேசன், நிலுவையில் உள்ள சிக்கலான பிரச்சனைகளில் தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். சமூக ஊடகங்க ளில் விமர்சனங்களை வைத்து வருகிறார் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் அனைத்து குடிமக்க ளுக்கும் சுதந்திரமான பேச்சு மற்றும் கருத் துரிமை உள்ளது. நீதிபதி பதவிக்கு முன் மொழியப்பட்ட நபர் தகுதி, தகுதி மற்றும் ஒருமைப்பாடு கொண்டவராக இருக்கும் வரை, அவரது கருத்துகள் அவர் அரசியல் சாசனப் பதவியை வகிக்கத் தடையாக இருக்க முடியாது.

பிரதமரை விமர்சிக்கும் கட்டுரையை பகிர்வதே குற்றமாகி விடுமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பத விக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜான் சத்யன்,  பிரதமர் மோடியை விமர்சிக்கும் கட்டுரை யைப் பகிர்ந்துள்ளார்; மேலும் நீட் தேர்வில்  கலந்து கொண்டவரின் (அனிதா) தற் கொலை தொடர்பான மற்றொரு பதிவில், அதை ‘அரசியல் துரோகத்தால்’ நடந்த கொலையாக சித்தரித்து, ‘இந்தியாவுக்கு அவமானம்’ என்று குற்றம் சாட்டியவர் என்று ஒன்றிய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இங்கு பிரதமரையும், நீட் தேர்வையும் விமர் சிக்கும் கட்டுரையைப் பகிர்வது மட்டுமே ஒருவரின் நீதிபதி பதவிக்கான தகுதியைப் பாதிக்காது. அவர் நல்ல தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பண்பைக் கொண்டவர் என்பதை நாம் அறிய வேண்டும்.  இதுபோன்றே அமிதேஷ் பானர்ஜி மற்றும் சக்யா சென் ஆகியோரது பெயர்களையும் நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.  இவர்கள் 5 பேரில், ஜான் சத்யத்தின் சீனி யாரிட்டியை உறுதி செய்வதற்காக, ஜனவரி 17-ஆம் தேதி தனித்தனியாகப் பரிந்து ரைக்கப்பட்ட மற்ற பெயர்களை விட, ஜான் சத்யனுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தை கொலீஜியம் கேட்டுக் கொண்டுள்ளது.