states

img

பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ள வெறுப்புச் சுனாமியை அடக்கியாக வேண்டும்

வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொய்யின் பேரழிவு இன்று நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. நாம் இப்போது அதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் சமூகத்தைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. 

புதுதில்லி, ஏப். 19 - போலியான தேசியவாதத்தின் பலிபீடத்தில்  சமாதானமும் பன்மைத்துவமும் பலியிடப்படு வதை இந்திய மக்களாகிய நாம் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இந்த நாட்டின் பன்மைத்துவத்திற்கு எதிராக, ஒரு சுனாமியைப் போல வெறுப்பு பரப்பப்பட்டு வரும் நிலையில், அந்த வகுப்புவாத நெருப்பை, இந்திய மக்கள் அடக்கியாக வேண்டும் என்றும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில், இதுதொடர்பாக சோனியா காந்தி மேலும் கூறியிருப்பதாவது: பன்முகத்தன்மை குறித்து பிரதமர் நிறையப் பேசுகிறார். ஆனால் கசப்பான உண்மை என்ன வென்றால், பல நூற்றாண்டுகளாக நமது சமூ கத்தை வரையறுத்து வளப்படுத்திய வளமான பன்முகத்தன்மைகளுக்கு எதிராக, அதிகரித்து வரும் வெறுப்பின் குரல்கள், வெளிப்படையான ஆக்கிரமிப்புகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், அடிப்படையில், நமது சமூ கத்தில் இணக்கமான, ஒத்திசைவான மரபுகளி லிருந்து வெகு தொலைவில் உள்ளன. 

பண்டிகைகளில் பகிரப்படும் கொண்டாட்டங் கள், வெவ்வேறு நம்பிக்கையுள்ள மதங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கு இடையில் உள்ள நல்ல  உறவுகள், கலைகள், திரைப்படம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நம்பிக்கைகள் என ஆயிரக்கணக் கான உதாரணங்கள். காலங்காலமாக நம் சமூ கத்தின் பெருமை மற்றும் நீடித்த பண்புகளாக விளங்குகின்றன.  ஆனால், குறுகிய அரசியல் ஆதாயத்துக் காக இவற்றைக் குறைத்து மதிப்பிடுவது இன்று  நடக்கிறது. இந்தியாவை நிரந்தரமாக வெறித்தன மான நிலையில் வைத்திருக்கும் இந்த மாபெரும் பிளவுபடுத்தும் திட்டத்தில், இன்னும் நயவஞ்சக மான விஷயம் என்னவெனில், அதிகாரத்தில் இருப்பவர்களின் சித்தாந்தத்துக்கு எதிரான அனைத்துக் கருத்து வேறுபாடுகளும், கருத்துக் களும் இரக்கமின்றி ஒடுக்கப்படுகின்றன. அரசியல் எதிரிகள் குறிவைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக அரசு இயந்திரத்தின் முழு பலமும் கட்ட விழ்த்து விடப்படுகிறது. சமூகச் செயற்பாட்டா ளர்களை அச்சுறுத்தி மவுனமாக இருக்க வைக்க முயற்சி நடக்கிறது.

குறிப்பாக பொய் மற்றும் விஷம் என்று விவரிக் கக்கூடிய விஷயங்கள் மட்டுமே சமூக ஊடகங் களில் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தப்படு கின்றன. ‘‘அதிகபட்ச ஆட்சி, குறைந்தபட்ச அரசாங்கம்’’ என்பது வியூகத்தின் தூண்களாக மாறியுள்ளன. உலக அளவில் நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்த வர்களாக இருக்கிறோம் என்பது, நாம் வீட்டில் எந்த  அளவுக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக மாறுகிறோம் என்பதைப் பொறுத்தது. கோஷங்களால் அல்லாமல், உண்மையான செயல்கள் மூலம் இதனைச் செய்ய வேண்டும். ஆனால், வெறுக்கத்தக்கப் பேச்சு எந்தப் பகுதியிலிருந்து வெளிப்பட்டாலும் அதற்கு எதிராக வெளிப்படையாக இறங்கி வருவதற்குப் பிரதமரை எது தடுக்கிறது? 

குற்றவாளிகள் தொடர்ந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் எரிச்சலூட்டும் மற்றும் ஆத்திரமூட்டும் மொழியைப் பயன்படுத்து வதற்கு எந்த தடையும் இங்கு இல்லை. மாறாக, பல்வேறு தரப்பிலிருந்து அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு இருப்பது தெரிகிறது. இதனால் தான் கொடூரமான செயல்களிலிருந்து, வழக்குகளிலிருந்து தப்பிக்கிறார்கள். தீவிரமான விவாதம், ஆலோசனை மற்றும் மாற்றுக் கண்ணோட்டத்தை வரவேற்கும் போக்கு எல்லாம் கடந்த கால விஷயமாகிவிட்டன. அந்த  விஷயத்தில் நாம் எல்லோரும் மோசமாக இருக்கி றோம். புதிய சிந்தனை செயல்முறைகளை ஊக்கு விப்பதற்காக மதிக்கப்படும் கல்வியாளர்கள் கூட,  உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த சகாக்களுடன் தொடர்பு கொள்வது கண்காணிக்கப்படுகிறது.  நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதும், ஒட்டு மொத்த சமூகங்களையும் தாக்குவதும் வழக்கமாகிவிட்ட நிலையில், பிளவுபடுத்தும் அரசியல் வழிபாட்டுத் தலங்களில் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்திலும், மக்களின் வீடுகளிலும் நுழைந்து விட்டது. நமது குடிமக்களால் மேற்கொள்ளப்படும் அன்றாடத் தேர்வுகளின் அடிப்படையிலான வெறுப்பை நாடு முன் எப்போதும் கண்டதில்லை.

நமது இந்த அற்புதமான நிலம் (இந்திய நாடு) பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலின் தாயக மாகக் கொண்டாடப்படுகிறது. உலகத்தையே கற்றறிந்த சிறந்த மனதின் ஆளுமைகளை இந்த நிலம் பெற்றெடுத்துள்ளது. தாராள மனப்பான்மை, அரவணைப்பு, வாழ்க்கை முறை மற்றும் சகிப்புத் தன்மை ஆகிய அனைத்தையும் சாத்தியமாக்கு வதில் இந்த நிலம் முக்கிய பங்காற்றியுள்ளது.  ஆனால், வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மை யின்மை மற்றும் பொய்யின் பேரழிவு இன்று நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. நாம் இப்போது அதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் சமூகத்தைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. போலியான தேசியவாதத்தின் பலி பீடத்தில் சமாதானமும் பன்மைத்துவமும் பலி யிடப்படுவதை மக்களாகிய நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த தலைமுறையில் மிகவும் சிரத்தை யுடன் கட்டியெழுப்பப்பட்ட அனைத்தும் தரைமட்ட மாக்கப்படுவதற்கு முன்பு, தற்போது கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ள இந்த வெறுப்பு சுனாமியை, பொங்கியெழும் நெருப்பை அடக்கியாக வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி தனது கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.