டேராடூன், ஜன.14- உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட் டம் ரிஷிகேஷ், பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா நகரம் ஜோஷிமத் ஆகும். தரைப் பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இமய மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதனால் நகரம் ‘இமயமலை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஜோஷிமத் நகரம் எவ்வளவு அழ கானதோ, அதே அளவிற்கு அதிக ஆபத் துள்ள நில அதிர்வு மண்டலம் 5-இல் உள்ள தாகும். அந்த வகையில், கடந்த வாரம் இங்குள்ள வீடுகள், ஹோட்டல்கள், கட்டடங்களில் மிகப்பெரிய அளவிற்கு விரிசல்கள் ஏற்பட் டன. சாலைகள் பிளந்தன. இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக கட்ட டங்கள் மண்ணில் புதைய ஆரம்பித்தன. “ஜோஷிமத் நகரில் 678 வீடுகளில் விரிசல் கண்டறியப்பட்டு, இதில் பாது காப்பு கருதி 81 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. மாதம் ரூ. 5 ஆயிரம் வாடகைப்படி மற்றும் பல்வேறு வரிகளிலிருந்து சலுகை கள் அறிவிக்கப்பட்டது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் ஜோஷிமத் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட்டார். உள்ளூர் மக்கள் மற்றும் நிபுணர்களு டன் அவர் கலந்து ஆலோசித்தார்.
இந்நிலையில், ஜோஷிமத் நகரம் முழு மையுமே மண்ணில் புதையும் ஆபத்தில் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையம் (National Remote Sensing Centre -NRSC) ஜோஷிமத் நகரை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் மூலம் புகைப் படம் எடுத்துள்ளது. இந்த புகைப்பட ஆதா ரங்களின் அடிப்படையிலேயே இஸ்ரோ மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜோஷிமத் நகரம் டிசம்பர் 27 முதல் ஜன வரி 8 வரையிலான 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு புதைந்துள்ளதாக தெரிவித் துள்ளது. “ஜோஷிமத்தில் கடந்த 2022 ஏப்ரல் மற்றும் நவம்பருக்கு இடையே நிலப் புதைவு மெதுவாக இருந்தது. அப்போது ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்தது. ஆனால் 2022, டிசம்பர் 27 மற்றும் 2023 ஜனவரி 8-க்கு இடையேயான காலத்தில் இந்த நிலப் புதை வின் தீவிரம் அதிகரித்தது. இந்த 12 நாட்களில் நகரம் 5.4 செ.மீ. புதைந்துள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நில வெடிப்பால் ஜோஷிமத்-அவுலி சாலையும் இடிந்து விழும் நிலையில் இருப் பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியுள்ளன. ஜோஷிமத்தில் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்கள் பற்றி விஞ்ஞானிகள் ஏற்கெனவே ஆராய்ச்சி மேற்கொண்டு வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.