states

கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

புதுதில்லி, பிப்.7- கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக குஜராத், காந்திநகர் ஐ.ஐ.டி., மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர். குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்கள் கூறியதாவது: கடல் நீரை குடிநீராக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தொழில்நுட்பத்தில் செலவு  குறைவு என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடல்  நீரில் இருக்கும் உப்பு மற்றும் அசுத்தமான பொருட்களை  99 சதவீதம் நீக்கிவிடலாம். குடிநீர் மிகவும் சுத்தமாகவும் இருக்கும். இந்த தொழில்நுட்பம் முழுமையான வெற்றி யடைந்தால், நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு மறைந்து விடும் என்று அவர்கள் கூறினர். குடிநீருக்கான தேவை அதிகரித்து வருவதாலும், நன்னீர் வளங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாலும், பல நாடுகள் கடல்நீரை உப்புநீக்கம் செய்து தேவை களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று இயற்பியல் மற்றும் பொருள் பொறியியல் உதவிப் பேராசிரியர் கோபிநாதன் காலன் தெரிவித்தார். இந்தக் கண்டு பிடிப்பு ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளது.