states

img

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலைவழக்கு விசாரணை முடிய ஐந்தாண்டுகள் ஆகும்

புதுதில்லி, ஜன.11 லக்கிம்பூர் கேரி கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைய குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும்  என்று வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி சூர்ய காந்த் உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி யும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை வழங்க சட்டம்  கொண்டுவரக்கோரியும் தில்லியின் எல்லைகளில் விவசாயி களின் போராட்டம் நடந்தது.  அதையொட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம்  தேதி காலை வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம்  லக்கிம்பூர்  மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும்  அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்தனர். அவர்கள் செல்லும் வழியில் லக்கிம் கேரி என்ற கிராமத்தில் ஒன்றிய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் நான்கு விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர்.

பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்தார். தொடர்ந்து நடை பெற்ற வன்முறையில்  எட்டு பேர் வரை உயிரிழந்தனர். அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வந்தார். நாடு  முழுவதும் கடும் கண்டனங்களும் போராட்டங்களும் அதிகரித்த  நிலையில், ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டது டன் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

திட்டமிட்ட சதி

இந்த வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகையில் ஒன்றிய இணை யமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆசிஷ் மிஸ்ரா முதன்மைக் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், லக்கிம்பூர்கேரி  சம்பவம்  விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை’ என்று சிறப்பு புலனாய்வு பிரிவு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கிறது. கொலை முயற்சி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முன்னதாக, 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 14-ஆவது நபராக வீரேந்திர சுக்லா என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், லக்கிம்பூர் கேரி கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைய குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி சூர்ய காந்த், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலான சாட்சிகளை மௌனமாக்கு வதற்காக  ஆஷிஷ் மிஸ்ராதனது அதிகாரத்தையும் செல்வாக்கை யும் பயன்படுத்தி அவர்களை கொடூரமாக தாக்கி வருகிறார். அவர்  ஜாமீனில் வெளிவருவது வழக்கு விசாரணையை திசை திருப்பும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. செஷன்ஸ் நீதிபதியின் அறிக்கை, “விசாரணை முடிய குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறது. 200 சாட்சிகள், 171 ஆவணங்கள், 27 தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள் உள்ளன” என்று நீதிபதி காந்த் கூறியுள்ளார். அமைச்சரின் மகனுடன் அரசு கைகோர்த்துள்ளது, இந்த வழக்கை  தினம் தோறும் விசாரிக்கவேண்டும். இது ஒரு  அமைச்சரின் மகன் தனது ஓட்டுநரிடம் விவசாயிகளின் மீது  வாகனத்தை ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றியது  என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வலியுறுத்தினார். இதையடுத்து விசாரணை ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.