states

முகக்கவசத்தை அலட்சியப்படுத்தும் இந்திய மக்கள்

புதுதில்லி, டிச.5 - நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஓய்ந்த நிலையில் ஒமைக்ரான் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஐந்து  பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு தடுக்கும் வழிமுறை களில் ஒன்றான முகக் கவசம் அணி யும் பழக்கம் மக்களிடையே வெகு வாகக் குறைந்துவிட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற வலை தள ஆய்வு நிறுவனம் 364 மாவட்டங் களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

 “நாங்கள் நடத்திய ஆய்வின் போது, வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிவதாக, 29  சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். இது, ஏப்ரலில் 29 சதவீதமாக இருந்தது. செப்ட ம்பரில் 13 சதவீதமாக குறைந்து, நவம் பரில் இரண்டு சதவீதமாக சரிவடைந்து ள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த தால் மக்கள் முக கவசம் அணிவதை அலட்சியப்படுத்தி வருகின்றனர்” என்று ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சச்சின் தபாரியா கூறியுள்ளார்.  இந்தியாவில் கடந்த 24 மணி நேர த்தில் 8,895 பேருக்கு தொற்று உறுதியாகி யுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2769 பேர்  தொற்றால் உயிரிழந்துள்ளனர்.