இந்தியாவுக்கு பலவீனமான பிரதமர் இருக்கிறார்
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகை யில் அமெரிக்கா எச்1பி விசா கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கி றது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவுக்கு மிகவும் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என பதிவிட்டிருந் தார். அந்த பதிவையும், தற்போது அமெ ரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதன் செய்தியையும் இணை த்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறி யிருப்பதாவது,”நான் மீண்டும் சொல்கி றேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று ராகுல் காந்தி கூறி யுள்ளார்.