புதுதில்லி, ஜூன் 2- தடைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து சொந்த தேவைக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. இத னால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வரு கின்றன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
வாங்கி குவிக்கும் இந்தியா
ஆனால் ரஷ்யா, போருக்கு முந்தைய விலையில் முதன்மையான ஊரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படு கிறது. அதாவது வர்த்தகத்தில் இந்தியா தரப்பில் ரூபாயிலும், ரஷ்யா தரப்பில் ரூபிளும் செலுத்தப்படுகிறது. இது மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்க வழியை ஏற்படுத்தியது. இந்தியா மே மாதத்தில் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள் ளது. இது ஏப்ரலில் 388,666 பீப்பாய்களாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 136,774 பீப்பாய்களாக மட்டுமே இருந்தது. ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதி யானது 1.05 மில்லியன் பீப்பாய் என்ற உச்ச அளவைத் தொடும் என நம்பப்படு கிறது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஏறக்குறைய 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது மொத்தத்தில் 2 சதவீதமாக மட்டுமே இருந்தது. பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 40 டாலர் விலை க்கும் குறைவாகவே ரஷ்யா வழங்கு கிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறு வனங்களும் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ள போதிலும் இந்தியாவுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா விமர்சித்தது. ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தங்கள் அரசிய லாக்கப்படக் கூடாது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பா, அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி
இந்தியாவின் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமின்றி அதில் ஒரு பகுதியை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாரம் ரஷ்யாவில் இருந்து கடல்வழி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. ஜெர்மனி மற்றும் போலந்துடன் சேர்ந்து குழாய் இறக்குமதியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியளித்தது. ரஷ்யாவின் பசிபிக் ஏற்றுமதி நாடு களான ஜப்பான் மற்றும் தென்கொரியா உட்பட, ரஷ்ய கச்சா எண்ணெய்யின் பிற இறக்குமதி யாளர்கள் தங்கள் கொள்முதலை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ இலக்கு வைத் துள்ளனர். இருப்பினும், உலகின் மிகப்பெரிய கச்சா இறக்குமதியாளரான சீனாவும், மூன்றாவது பெரிய நாடான இந்தியாவும், மற்ற சப்ளை யர்களுடன் ஒப்பிடும்போது மலிவான விலை யைப் பயன்படுத்திக் கொண்டு அதிக அளவு பொருட்களை வாங்கி, ரஷ்ய ஏற்றுமதி யாளர் களுக்கு ஓர் உயிர்ப்பை அளித்துள் ளன.
ரிலையன்ஸ் நிறுவனம்
தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜ ராத் மாநிலம் ஜாம்நகரில் 1.2 மில்லியன் பேரல்கள் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளா கத்தை இயக்குகிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அதனை பிரித்தெடுத்து பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களாக பெரும் பகுதியை ஏற்றுமதி செய்கிறது. சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாளு கிறது. மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனை ரிலை யன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறை முகத்தில் இருந்து 2.0 மில்லியன் பீப்பாய்கள் டீசலை மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட் கள் இறக்குமதிக்கு மார்ச் 11-ம் தேதி அன்றே ஆஸ்திரேலியா தடை விதித்தது. இது ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அதே ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியா வந்து இங்கு சுத்திகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியா வுக்கு பெட்ரோல், டீசலாக செல்கிறது. ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதிக விலைக்கு ஆஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக வாங்க தடை விதித்துள்ள ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ரஷ்ய பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிடம் வாங்கி விற்பனை
சிக்கா துறைமுகம் மே மாதத்தில் ஐரோப்பாவிற்கு 2.56 மில்லியன் பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது. ஏப்ரல் மாதம் 890,000 பீப்பாய்கள் பெட்ரோலை அமெரிக்கா விற்கு அனுப்பியது. இவை ரஷ்யாவில் வாங்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு தடை விதித்ததால் இந்திய நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற மூன்றாவது நாட்டில் ரஷ்ய கச்சா எண்ணெய்யிலிருந்து சுத்தி கரிக்கப்பட்ட எரிபொருளுக்கும் தடையை நீட்டிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றி யம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.