states

கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரிப்பு

புதுதில்லி, ஜூலை 26- கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது என்று மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், நாட்டில் வேலை யின்மை தொடர்பான தரவுகள் மற்றும் தற்  போதைய நிலை குறித்து மக்களவையில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் பதிலளித்துள்ளது. அந்தஅமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில், ஜூலை 2021 முதல் ஜூன் 2022  வரை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அம லாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்  திய காலமுறை தொழிலாளர் கணக்கெ டுப்பிலிருந்து (பிஎல்எஃப்எஸ்) இந்தியா வில் வழக்கமான நிலையின்படி (முதன்மை  நிலை(ps)+துணை நிலை(ss) மதிப்பி டப்பட்ட வேலையின்மை விகிதம் 4.1 சத வீதம் ஆகும். சமீபத்திய பிஎல்எப்எஸ் ( PLFS) ஆண்டு  அறிக்கை, 2021-22 இன் படி, 15 வயது மற்றும்  அதற்கு மேற்பட்ட வயதினருக்கான வழக்க மான நிலையில் (ps+ss) மதிப்பிடப்பட்ட தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2019-20 முதல் அதிகரித்துள்ளது, இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகை யில்,  2019-20 ஆம் ஆண்டில் 53.5 சதவீதம்,  2020-21 ஆம் ஆண்டில் 54.9 சதவீதம், 2021-22  ஆம் ஆண்டில் 55.2 சதவீதம் என வேலை யின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.