states

img

ரிலையன்ஸ், அதானி, ராம்தேவின் ‘இறைச்சி’ ஏற்றுமதியை தடுப்பீர்களா?

வட மாநிலங்க ளில், நவராத்திரியைக் காரணம் காட்டி, இறைச்சி உணவுக்குத் தடையை ஏற்படுத்திய சங்-பரிவாரங்கள், தென்மாநிலமான கர்நாடகத்தில், ‘ஹலால்’ செய்யப்பட்ட இறைச்சி யை விற்கக் கூடாது; குறிப்பாக, இந்துக்கள் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று மிரட் டலை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்க் கார்கே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ராம்தேவ் புட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அதானி வில்மர் லிமிடெட், ஓஎம் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், டாபர் இந்தியா லிமிடெட், கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா கன்ஸ்யூ மர் புராடக்ட்ஸ் லிமிடெட் மற்றும் அமுல்பெட் டெய்ரி ஆகிய நிறுவனங்கள், ஜம்மியத் உலமா ஹலால் அறக்கட்டளையிடம் ‘ஹலால்’ சான்றிதழ் பெற்றுக்கொண்டு அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்கின்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு  வருமானம் கிடைக்கிறது. இந்துக்களால் நடத்தப் படும் இந்த ஹலால் வியாபாரத்தை ‘சுயசார்பு இந்தியா’ என்ற பெயரில் தடுத்து நிறுத்த பாஜக-வின ருக்கு திராணி உண்டா?” என்று பிரியங்க் கார்கே சவால் விடுத்துள்ளார்.