states

img

நிதியமைச்சர் தாக்கல் செய்த ‘தேர்தல் பட்ஜெட்!’

தொழில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்பு, பணவீக்கத்தை குறைக்கும் திட்டங்கள் இல்லை; கல்வி, சுகாதாரம், ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கான நிதி குறைப்பு

புதுதில்லி, பிப். 1 - 2023-24 நிதியாண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதனன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக் கோடி மனிதருக்கும் சேவை, உள் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன் உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று  கூறிய அவர், பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டார். போக்குவரத்து திட்டங்களை நிறை வேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்; பசுமை எரிசக்தி  நடைமுறைக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கு ரூபாய் 10 ஆயி ரம் கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் களுக்கு கடன் வழங்க ரூபாய் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 7.5 சதவிகித வட்டியில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம் துவங்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்; ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன திட்டம் அமல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் கூறினார்.

நாட்டின் வரி வருவாய் 23.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.9 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரி வித்த அவர், செல்போன் மற்றும்  தொலைக்காட்சி உதிரி பாகங்களுக் கான இறக்குமதி வரி குறைப்பு, சிகரெட் மீதான வரி உயர்வு அறிவிப்பு களையும் வழங்கினார். தனி நபர் வரு மான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இவை தவிர, “பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்திற்கு  முன்னேறியுள்ளது; திணை உற்பத்தி யில் இந்தியா 2-வது மிகப்பெரிய ஏற்று மதியாளராக திகழ்கிறது” என்று கூறிய நிர்மலா சீதாராமன், அடுத்த ஓராண்டு க்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச  உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்கும்;  உணவு தானிய விநியோ கத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்; ரூ. 700 கோடி  ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங் கள் உருவாக்கப்படும்; நாடு முழு வதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்; சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப் படும்; ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜி லாக்கர் ஆகியவற்றிற்கு முன்னுரி மை அளிக்கப்படும்; 5ஜி மொபைல்  செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள்  உருவாக்கப்படும்; கொரோனா கால த்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழி களில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்; தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும்; அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணைய தளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும்;

கழிவு நீர்  அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சத விகிதம் இயந்திரங்களைப் பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பான் அடை யாள அட்டை எண் பயன்படுத்தப்படும்” என்றும் அடுக்கடுக்கான அறிவிப்பு களை வெளியிட்டார். ஆனால், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023-24 நிதியாண்டிற் கான பட்ஜெட்டில், கல்வி, சுகாதாரம்,  ஊரக வேலையுறுதித் திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ளது, வேலையின்மை, விலை வாசியை குறைக்கும் அறிவிப்புகள் இல்லை. வழக்கமான படோடோபமான ஏமாற்று அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தேர்தல் வரவுள்ள மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோரம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 9 மாநில வாக்கா ளர்களை குறிவைத்தும், 2024 மக்கள வைத் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளன.

மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கொடூரத்  தாக்குதல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடல்

பிப்.22-28 நாடு தழுவிய கிளர்ச்சி

புதுதில்லி, பிப்.1- ஒன்றிய அரசின் பட்ஜெட், மக்கள்  விரோத பட்ஜெட் என்றும்  மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கொடூரத் தாக்குதல் தொடுத்த பட்ஜெட் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒன்றிய அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பே  மந்த நிலையில் இருந்தது, கடந்த இரண்டு ஆண்டுகளிலும், பின்னர் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்பும்  மேலும் மோசம் அடைந்து, பொருளா தார மந்தத்தை நோக்கி செல்லக்கூடிய சமயத்தில் வந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட்டானது, மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கி, உள்நாட்டுத் தேவையை அதி கப்படுத்துவதன் மூலம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும் விதத்தில் முக்கியமான பிரச்சனை களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் பட்ஜெட் இவ்வாறு பிரச்சனையை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்திருக்கிறது. மாறாக,  நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்வ தற்காக, அரசாங்கத்தின் செலவினங் களை மேலும் வெட்டிக் குறைத்திருக் கிறது. பணக்காரர்களுக்கு மேலும் வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் செல்வ வளத்தில் 40.5 விழுக்காட்டை நாட்டிலுள்ள உயர்ந்த நிலையில் உள்ள ஒரு  விழுக்காட்டினர் எடுத்துச்சென்றுள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை காட்டும் சமயத்தில்தான் அரசாங்கம் இவ்வாறு செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகளை அளித்திருக்கிறது. இவ்வாறு ஒரு முரண்பட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகமாவதற்கே இட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

2022-23 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட 2023-24ஆம் ஆண்டுக்கான மொத்த  அரசாங்கத்தின் செலவினம் வெறும்  7 விழுக்காடு அளவே அதிகரித்திருக் கிறது. இதே காலகட்டத்தில் பணவீக்கத்து டன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது என்பது 10.5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மொத்த உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டிலும் அரசாங்கத்தின் செலவினம் வெட்டப்பட்டிருக்கிறது. வட்டி மூலம் வாங்கப்படும் தொகைகளை (interest payments) ஒதுக்கிவிட்டோம் என்றால், பின் இந்தச் செலவினம் என்பது சென்ற ஆண்டைக்  காட்டிலும் 5.4 விழுக்காடு மட்டுமே அதிகமாகும்.   பணவீக்க விகிதம் 4 விழுக்காடாக இருப்பதையும், மக்கள் தொகை சுமார் 1 விழுக்காடு உயரக்கூடும் என்பதை யும் கணக்கில் எடுத்துக்கொண்டோ மானால், இந்த பட்ஜெட்டானது பெரும் பான்மையான மக்களின் வாழ்வாதா ரங்கள் மீது மேலும் கொடூரமான முறை யில் தாக்குதல் தொடுத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

33 விழுக்காடு குறைப்பு

வேலையில்லாத் திண்டாட்டம் வரலாற்றில் இதற்குமுன் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் மகாத்மா காந்தி  தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற் கான ஒதுக்கீட்டுத் தொகையை 33  விழுக்காடு  அளவுக்குக் குறைத்திருக் கிறது. உணவு மானியங்களுக்கான தொகை 90 ஆயிரம் கோடி ரூபாய்  வெட்டப்பட்டிருக்கிறது. ரசாயன  உரத் திற்கான மானியம் 50 ஆயிரம் கோடி ரூபாயும், பெட்ரோலியத்திற்கான மானியம் 6,900 கோடி ரூபாயும் வெட்டப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் மிகப்பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையிலும், இதற்காக சுகாதாரத் துறையில் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையில் 9,255 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் இருக்கிறது. இதேபோன்றே, கல்விக் காக ஒதுக்கப்பட்ட தொகையிலும் 4,297 கோடி ரூபாய் செலவு செய்யப்பட வில்லை.  

ஏற்கனவே அற்ப ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி ஊழி யர்கள், சத்துணவு ஊழியர்கள், ‘ஆஷா’  ஊழியர்கள் போன்ற திட்டப் பணி யாளர்களுக்கு எவ்வித ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை. பொது பட்ஜெட் என்பது மொத்த  செலவினத்தில் வெறும் 9 விழுக்காடே யாகும். மக்கள் தொகையில் 16 விழுக் காடாக இருக்கின்ற  தலித்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் 3.5 விழுக்காடேயாகும். அதேபோன்றே 8.6 விழுக்காடாக இருக்கின்ற பழங்குடி யினருக்கு 2.7 விழுக்காடே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கான  நிதி குறைப்பு

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று இவர்கள் தம்பட்டம் அடித்தபோதிலும், பிரதமர் கிசான் நிதியத்திற்கான ஒதுக்கீடு 68  ஆயிரம் கோடி ரூபாயிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மூலதனச் செலவினம் கணிசமாக உயர்த்  தப்பட்டிருப்பதாகவும், இதனால் வேலை  வாய்ப்பு உருவாகும் என்றும் அரசுத்தரப்பில்  கூறப்பட்டுள்ள போதிலும், 2022-23ஆம் ஆண்  டுக்கான திருத்திய மதிப்பீடுகள் காட்டுவது  என்னவென்றால், மொத்த செலவினம் 9.6  விழுக்காடு அளவிற்கே உயர்ந்திருக்கிறது என்பதும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் 15.4 விழுக்காடு உயர்வைக்காட்டிலும் மிகவும் குறைவு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சம் ரூபா யிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டி ருப்பது ஊதியம் பெறுவோர் மத்தியில் சற்றே  நிவாரணம் அளிக்கக் கூடும். எனினும், பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், இவர்கள் சுகா தாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசியப் பணிகளுக்கு அதிகம் செலவு செய்யத் தள்  ளப்பட்டிருக்கிறார்கள். பட்ஜெட், மாநில அரசாங்கங்களுக்கு மாற்ற வேண்டிய தொகைகளை மேலும் குறைத்திருப்பதன் மூலம், ஒன்றிய அர சாங்கம் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது மேலும் தாக்குதல்களைத் தொடுத்திருக்கும் கொள்கையைத் தொடர்கிறது. 2022-23இல் பணவீக்க விகிதம் 8.4 விழுக்காடாக இருந்த போதிலும், இந்த அரசாங்கம் 2021-22இல் எந்தளவுக்கு தொகையை மாற்றியதோ அதே  அளவுக்குத்தான் இப்போது 2022-23க்கான திருத்திய மதிப்பீடுகளும் காட்டுகின்றன. மேலும், மாநில அரசாங்கங்கள் கடன்களைப் பெறுவதற்கு, நிபந்தனைகள் திணிக்கப்பட்டி ருக்கின்றன. மேலும் நிதியமைச்சர் பணக்காரர் களுக்கு அளித்திருக்கும் வரிச் சலுகைகள் அரசு வருவாயில் சுமார் 35 ஆயிரம் கோடி  ரூபாய் அளவிற்கு 2023-24இல் இழப்பு ஏற்படு வதற்கு இட்டுச் செல்லும்.

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும், மக்களின் உள்நாட்டுத் தேவைகளைப் பெருக்கி, பொருளாதாரத்தை சரிசெய்வ தற்கும், பட்ஜெட்டில் கீழ்க்கண்டவற்றைச் செய்திருக்க வேண்டும்:

(1)     வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் கணிசமான அளவிற்குப் பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும்.

(2) மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை அதிகரித்திட வேண்டும், ஊதியத்தையும் அதிகரித்திட வேண்டும்.

(3)     5 கிலோ உணவு தானியங்கள் இலவச மாக அளிப்பதுடன், மானிய விலையில்  5 கிலோ உணவு தானியங்கள் மீண்டும்  அளித்திட வேண்டும்.

(4)     செல்வந்தர்கள் மீது செல்வ வரி, வாரிசு வரி விதித்திட வேண்டும்.

(5) உணவு மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, பிப்ரவரி 22-28 தேதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக நாடு தழு விய அளவில் கிளர்ச்சிப் போராட்ட நட வடிக்கைகளை மேற்கொண்டிடும். மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட விரும்  பும் அனைத்துத்தரப்பினரும் இப்போராட் டங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)