புதுதில்லி, பிப். 21 - பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர ஒன்றிய அரசு மறுத்து விட்டதால், ஒரு மகளாக தனது தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையைக் கூட தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை மெகபூபா எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நானும் எனது தாயாரும் கடந்த 2020-ஆம் ஆண்டு பாஸ்போர்ட் புதுப்பித்த லுக்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், எனக்கும் எனது தாயாருக்கும் பாஸ் போர்ட் வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்று எதிர்மறையான அறிக்கையை ஜம்மு - காஷ்மீர் சிஐடி வழங்கியுள்ளது. எனது மகள் இல்டிஜா மேற்படிப்புக் காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் புதுப்பித்தல் கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்ப மும் இன்னும் இழுபறி நிலையில்தான் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மீண்டும் தனது கடமையைச் செய்ய தவறுகிறது. தேசப் பாதுகாப்பு என்ற சாக்கில் ஜம்மு -காஷ்மீரில் பத்திரிகையாளர்கள், மாண வர்கள் என பலரது பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் தன்னிச்சையான போக்குடன் நிராகரிக்கப்படுகிறது. எனது தாயாரை புனித பயணமாக மெக்காவிற்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதற்காக நான் காத்திருக்கிறேன். அற்பத்தனமான அரசியல் காரணங்களால் எனது தாயாரின் ஒரு சிறிய விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல் போவது ஒரு மகளாக எனக்கு கடும் வேதனையை கொடுக்கிறது. எனவே, இந்த பாஸ்போர்ட் விவகாரத்தில் நீங்கள் (ஜெய்சங்கர்) தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.