அகமதாபாத், ஜன.29- நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆண்டுகள் ஆன நிலையில், பட்டி யலின மக்களுக்கு எதிரான வன் கொடுமைகள் தொடர்கின்றன. இதை விட வேதனையானது என்ன வென்றால் இதுபோன்ற வழக்கு களில் தண்டனை வழங்கப்படும் சத வீதம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. இது குஜராத் உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களில் பட்டியலின மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்துகிறது. மாநி லங்களவையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையின் அடிப்படையில், 2018- 2021-ஆம் ஆண்டுகளில் பட்டி யலின மக்களின் மீதான சாதி வன் கொடுமை வழக்குகளில் தண்டனை அளிப்பது குஜராத்தில் வெறும் 3.065 சதவீதமாக உள்ளது. இது தேசிய சரா சரியை விட மிகக் குறைவு. கடந்த வெள்ளிக்கிழமை, ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள நவா கம் கெடே பகுதியில் பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்த சிறுவனை சட்ட விரோதமாக மதுபானம் வைத்தி ருந்ததாகக் காவலர்கள் கடுமை யாகத் தாக்கியுள்ளனர். இது தொடர் பாக சிறுவனின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து ஜாம் நகர் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு அது வெளிச்சத்திற்கு வருவது இது ஒன் றும் முதல் சம்பவம் அல்ல. இது கடைசி சம்பவமாகவும் இருக்க வாய்ப்பில்லை.
பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்பவர்களைத் தண்டிக்கும் விஷயத்தில் மாநில அரசு பல சமயங்களில் செயலற்ற தாகவே உள்ளது. இதற்கு அதிகாரி களைக் காரணம் காட்டி ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தப்பிக்க முடியாது. ஏனெனில் பட்டியலினத்த வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் பெரும் பான்மையான இடங்களில் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சியில் 2018-2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 5,369 வழக்குகளில், 32 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 1,012 வழக்குகளில் குற் றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக் கப்பட்டனர். எழுத்தாளரும் தலித் உரிமை ஆர்வலருமான ஆலிஸ் மோரிஸ், “ இந்த நிலை ஆபத்தானது. நான் தரவுகளுடன் உடன்படவில்லை. இந்தத் தரவு தவறாக இருக்கலாம், ஏனெனில், எனது மதிப்பிட்டின்படி, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன் னும் அதிகமாக இருக்க வேண்டும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூட பட்டியலின மக்கள் மீதான தாக்கு தல் குறித்த நிகழ்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை அளிப்பது குறித்துப் பேசிய மோரிஸ், “தண்டனை வழங் கப்பட்ட வழக்குகளை உற்றுக் கவ னித்தால், தண்டனை பெற்றுத் தரு வதற்கு சில தலித் ஆதரவு தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் அல் லது அந்த சமூகத்தில் சில சக்தி வாய்ந்த பிரிவினர் பின்னால் இருப் பது தெரியும். பல சந்தர்ப்பங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், புகார்தாரர் மற்றும் சாட்சிகள் அனைவரும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் சமூகத்தின் அழுத்தம் உள்ளிட்ட பிற அழுத்தங்களை சந்திக் கின்றனர். இதன் காரணமாக பல வழக்குகள் பதிவு செய்யப்படாம லேயே போகின்றன. வழக்குகள் குறைவாக பதிவாவதற்குக் கார ணம் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லாததே காரணம் என்றார்.
பாஜக ஆட்சியும்-காவல்துறையும்
2018-ஆம் ஆண்டு 1,426 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 450 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 14 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 2019-ஆம் ஆண்டு 1,416 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. ஏழு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 387 வழக்கு களின் விசாரணை மட்டும் நிறை வடைந்துள்ளது. மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020-ஆம் ஆண்டு 1,326 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. 68 வழக்கு களின் விசாரணை நிறைவடைந்துள் ளது. மூன்று வழக்குகளில் தண் டனை அளிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு 1,201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 139 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டு வழக்கு களில் மட்டுமே தண்டனை அளிக் கப்பட்டுள்ளது.