புதுதில்லி, டிச.29- பணமதிப்பு நீக்கத்திற்கு எதி ரான வழக்குகளின் விசாரணை முடி வடைந்துள்ள நிலையில், உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு ஜன வரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீ ரென தொலைக்காட்சியில் தோன் றிய பிரதமர் நரேந்திர மோடி, அது வரை புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று தடாலடியாக அறிவித்தார். இதனால், கறுப்புப் பணம், பயங்கரவாதிகளிடம் புழங் கும் கள்ளப் பணம் ஒழிக்கப்படும். ரொக்கப் பணப்புழக்கம் குறைக்கப் படும் என்று விளக்கமளித்தார். ஆனால், மோடி அரசின் நடவ டிக்கை நாட்டையே நிலை குலை யச் செய்வதாக அமைந்தது. செல் லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளிடம் கொடுத்து புதிய 1,000 மற்றும் 2,000 ரூபாய் தாள்களை பெறு வதற்காக மக்கள் மாதக் கணக்கில் வங்கிகளுக்கு அலைக்கழிக்கப் பட்டனர். ஏராளமானோர் ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க நின்றனர். அவர்களில் பலர் உயிரை விட்ட சோகமும் நிகழ்ந்தது. ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் இன்னல் களுக்கு ஆளானதுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கிப் போயின. பல சிறுதொழில் நிறு வனங்கள் அழிந்தே போயின. கோடிக்கணக்கானோர் வேலையை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர்.
இதனிடையே, ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் சட்டமீறல்கள் உள்ளதாகவும், நிர்வாக உத்தரவு மூலம் கரன்சி நோட்டுகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அப்போதே அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற் றப்பட்டன. எனினும், விசாரணை மிகத்தாமதமாக 2022-ஆம் ஆண் டில்தான் துவங்கின. நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணி யன், பி.வி. நாகரத்னா ஆகிய 5 நீதி பதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த சில மாதங்க ளாக வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலை யில், உச்ச நீதிமன்றத்துக்கு குளிர் கால விடுமுறை விடுக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 2-ஆம் தேதி நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையி லான அமர்வு தீர்ப்பு வழங்க உள் ளது.