உத்தவ் தாக்கரே கேள்வி
மும்பை, பிப். 20 - பசுவுக்காக மனிதர்களை கொலை செய்யும் பாஜக-வின் இந்துத்துவா வை நான் ஏற்கவில்லை என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். சக்திவாய்ந்த தலைவரின் (மோடி யின்) ஆட்சி நடப்பதாக கூறிக் கொள்ளும் வேளையில், இந்துக்கள் ஆக்ரோஷமாக வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. எதற்காக இந்து ஆக்ரோஷ் பேரணி நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் நடைபெற்ற வட இந்தியர் சமுதாயக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது இது தொடர்பாக அவர் மேலும் பேசி யிருப்பதாவது: சிவசேனாவுக்கு என்ன நடந்தது, நாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்பதை பார்த்திருப்பீர்கள். இது உங் களுக்கும் நடக்கலாம். அனைத்து கட்சிகளும் கண்களைத் திறந்து கவனமாக இருக்க வேண்டும். கட்சியில் (சிவசேனாவில்) இருந்து விலக விரும்புபவர்கள் போகலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைய லாம். ஆனால், என்னையே என்னு டைய வீட்டில் இருந்து தூக்கி எறிந்து விட்டு, வீட்டைக் கைப்பற்ற நினைக் கிறார்கள். என் தந்தைதான் அவர்களை வளர்த்தார். சிவசேனா தொண்டர்கள் அவர்களை ஆதரித்த னர்.
ஆனால் இப்போது அவர்கள் வீட்டின் உரிமையாளராக விரும்பு கிறார்கள். நமது அரசு நிறுவனங்கள் (தேர்தல் ஆணையம்) ஒரு திரு டனை வீட்டின் உரிமையாளராக மாற்றி விட்டன. நமது நாட்டில் என்ன நடக்கிறது. ஆனால் நடந்தது நல்லது தான். ஏனென்றால் மக்கள் கோப மடைந்துள்ளனர். நடந்தவை அனைத்தும் தவறு என்பதை உணர் ந்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் நிலைக்கு பாஜக-தான் எங்களை தள்ளியது. ஏனெனில் அது எங்களுக்கு கொடுத்த உறுதியை மதிக்கவில்லை. நான் பாஜக-வை விட்டுத்தான் விலகியுள்ளேன். இந்துத்துவாவை விட்டு அல்ல. மக்களை பிரிக்கும் பாஜக-வின் இந்துத்வாவை, நான் ஏற்கவில்லை. ஹிஜாப், பசுவுக்கான கொலை போன்ற பிரச்சனைகளை வைத்து பாஜக இந்துக்களை தவறாக வழி நடத்துகிறது. சமீபத்தில் மும்பையில் இந்து ஆக்ரோஷ் பேரணி நடை பெற்றது. சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் (மோடி) நாட்டை ஆளும் போது இந்துக்கள் ஏன் ஆக்ரோஷ மாக வேண்டும்? பலமான இந்தியாவை உருவாக்க நாம் வாக்களித்த தலைவர் தற்போது அவர்மட்டும் பலமானவராக மாறி விட்டார். ஆனால் நாடு பலவீன மடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது அநீதி ஆகும். இது கேவலமான அரசியல். சிவசேனா வுக்கு எதிராக நீங்கள் (பாஜக) போராட விரும்பினால் தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் முன்பு எங்களை சந்தித்திருக்க வேண்டும். சிவசேனா ஒருபோதும் முஸ்லிம்களுக்கும், வட இந்தியர்களுக்கும் எதிரானது இல்லை. இந்தியாவை தாய் நாடாக கருதுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.