புதுதில்லி, பிப்.8- தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகம் (JNU) நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக அறியப்படுகிறது. நவீன சிந்தனைகள், ஆழமான ஜன நாயகப் பார்வை, முற்போக்கான நட வடிக்கைகளுக்கும் பெயர் பெற்றது. ஆனால், இந்தப் பல்கலைக்கழ கத்தை மதவெறிமயமாக்க நீண்டகாலமா கவே மோடி அரசு முயற்சித்து வருகிறது. தில்லி ஐஐடி எலக்ட்ரிக் துறை பேரா சிரியர் முனைவர் ஜெகதீஷ் குமாரை துணை வேந்தராக நியமித்து, அவர் மூலமாக பல்கலைக்கழக அமைதியை முடிந்தளவிற்கு சீர்குலைத்தது. தற் போது ஜெகதீஷ் குமாரை, பல்கலைக் கழக மானியக்குழுவான யுஜிசி-க்கு தலைவராக நியமித்து விட்டு, புதிய துணைவேந்தராக பேராசிரியர் முனை வர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் (59) என்ப வரை நியமித்துள்ளது. இந்நிலையில், ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையுடன் வந்துள்ள சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டும், தீவிர இந்துத்துவா பின்னணி கொண்டவர் என புகார்கள் எழுந்துள்ளன. சிறுபான்மையினரை விமர்சித்தும், விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக வும் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் கடந்த காலங்களில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்துகளும் வெளியாகியுள்ளன. கிறிஸ்தவர்கள், ‘அரிசிப் பைக்காக மதம் மாறியவர்கள்’ என்றும், முஸ்லிம் களில் சன்னி பிரிவினர் இஸ்லாத்தில் தீவிரம் காட்டுபவர்கள் என்றும் அந்த பதிவுகளில் சாந்திஸ்ரீ விமர்சித்துள் ளார். மேலும், ‘காந்தியும் கோட்சேவும் ஒரே கீதையை படித்து நம்பினாலும் அதை நேரெதிர் பாடங்களாகப் புரிந்து கொண்ட னர் என்பது எனது கருத்து. ஒன்றுபட்ட இந்தியாவை காண மகாத்மா காந்தியை கொல்வது அவசியம் என கோட்சே எண்ணி விட்டார்’ என்றும் சாந்திஸ்ரீ குறிப் பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுகள் தற்போது சமூகவலைதளங்களிலும் பகி ரப்பட்டு வருகின்றன.