புதுதில்லி, செப். 9 - ஜி20 மாநாட்டையொட்டி, தலை நகர் தில்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் ஈவிரக்கமின்றி வேட்டையா டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை, விலங்குகள் நல ஆர்வலர்களை கடும் கோபம் அடையச் செய்துள்ளது. ஜி20 மாநாட்டிற்கு, உலகத் தலை வர்கள் வரும்போது, அவர்களின் கண்களில், இந்தியாவின் ஏழை மக்கள், அவர்களின் குடிசைகள் தென் பட்டு விடக் கூடாது என அவற்றைத் திரைகட்டி மறைக்கும் வேலைகளை மோடி அரசு செய்தது. இன்னும் சில இடங்களில் குடிசைகளை இடித்துத் தரைமட்டமாக்கியது. அங்கு குடி யிருந்த மக்களை கண்மறைவான இடங்களுக்கு மாற்றியது. அடுத்ததாக தலைநகரில் சுற்றித் திரிந்த குரங்குகளை அது பிடித்தது. இவை அனைத்திற்கும் அப்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் மோடி அரசு எதேச்சதிகாரமாக நடந்து கொண்டது. இந்நிலையில்தான், மோடி அரசா னது, நாய்களையும் விடாமல் மிகக் கொடூரமான முறையில் விரட்டி விரட்டி வேட்டையாடியிருப்பது தெரிய வந்துள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, தில்லி யின் தலைநகர் பிரதேசத்தில் 60 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. 20 லட்சம் குடியிருப்பாளர்கள், இந்த நாய்க ளுக்கு உணவளித்து பாதுகாக்கின்ற னர். இந்த நாய்கள் மக்களைத் தாக்கும் நிகழ்வுகள் மிகவும் சொற்பமே. இவற் றால் பெரிதாக எந்தப் பிரச்சனை இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டையொட்டி, தெருநாய்களை அப்புறப்படுத்தும் உத்தரவை, தில்லி மாநகராட்சி ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இரண்டு நாட்க ளுக்குப் பின்னர் ஏனோ, அந்த உத்தர வைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில்தான், எந்த அறி விப்பும் இல்லாமல் திடீரென, கொஞ்ச மும் ஈவிரக்கமற்ற வகையில், தெரு நாய்கள் வேட்டையாடப்பட்டு உள்ளன. கைகளால் அல்லது வலைகளைப் போட்டு நாய்களைப் பிடிப்பதற்குப் பதி லாக, இரும்புக் கம்பிகளால் சுருக்கு மாட்டப்பட்டு நாய்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளன. இதில் ஏராளமான நாய்கள் கழுத்து இறுக்கப்பட்டதால் துடி துடித்து பெரும் சித்ரவதையை அனு பவித்துள்ளன. இன்னும் சில இடங்க ளில், கால்கள் கட்டப்பட்டு குழிக ளுக்குள் தூக்கிப் போடப்பட்டு உள்ளன.
வளையத்துடன் கூடிய கம்பிகளைப் பயன்படுத்தி நாய்களைப் பிடித்த போது, அந்த நாய்களின் வாய்ப்பகுதி, கழுத்துப் பகுதிகளில் காயம்பட்டு ரத்தம் சொட்டியுள்ளன. இது விலங்குகள் நல ஆர்வலர் களை அதிர்ச்சியடையச் செய்துள் ளது. இந்த பூமியில் சக உயிர்களுக்கு இடமளிக்காத ஒன்றிய பாஜக அரசு, ‘வசுதைவ குடும்பம்’ என்பதன் அடிப் படையில், ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ - கருப்பொருளில் ஜி-20 மாநாட்டை நடத்துவது பாசாங்குத்தனமானது என்று அரசு சாரா அமைப்பான, ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (PFA) நிர்வாகி அம்பிகா சுக்லா கடுமையாக சாடியுள்ளார். “தில்லி மக்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதை, உலகத் தலை வர்கள் கண்டால், அது உண்மையில் நாட்டைப் பற்றிய நல்ல அபிப்ரா யத்தையே உருவாக்கும்; எதற்காக இந்த தேவையற்ற நடவடிக்கை?” என்று ‘ஹவுஸ் ஆப் ஸ்ட்ரே அனி மல்ஸ்’ நிறுவனர் சஞ்சய் மொஹபத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு எழுந்த கண்ட னங்களால், ஜி20 மாநாட்டிற்கும், நாய்களை அப்புறப்படுத்துவதற்கும் தொடர்பில்லை என்று தில்லி முனி சிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தப்பிக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளது. ஆனால், நாய்களைப் பிடிப்ப தற்காக பயன்படுத்தப்பட்ட ஆம்புல ன்ஸ்களில், “ஆன் டியூட்டி ஜி-20” என்று எழுதப்பட்டிருந்ததை ஊட கங்கள் வெளிச்சம் போட்டுள்ளன.