ஜார்க்கண்ட்டில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் (நவம்பர் 13 மற்றும் 20) நடைபெறு கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்நிலையில், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனின் தனிச்செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்த மான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சனியன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வருமானவரித்துறை சார்பில் வெளியான தகவலில்,”வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சுனில் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை முடிந்த பின்னரே முழு விபரமும் தெரியவரும்” என கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஜார்க் கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை குறிவைத்து அவரது உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்க ளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது என ஜேஎம்எம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.