புதுதில்லி, மே 31 - வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா ஷாயி ஈத்கா மசூதிகள் முன்பு கோயிலாக இருந்தவை என்றும், எனவே மசூதிகளை இடித்து அங்கு மீண்டும் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் சங்-பரிவார் அமைப்பினர் கலவரத்தைத் தூண்டி வருகின்றனர். அயோத்தியைப் போலவே இங்கும் மசூதி களை இடித்து கோயில் கட்ட வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளை யும் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்த வழக்குகளில், ‘வழி பாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991’ கியான்வாபி மசூதிக்கு பொருந்தாது என்பதும் ஒன்றாகும். இந்த வழக்கை, நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷ் விசாரணை நடத்தினார். மசூதியின் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி யின் வாதம் முதலில் தொடங்கியது. கடந்த மே 26 அன்று தொடங்கிய வாதம் திங்கட்கிழமையும் தொடர்ந்தது. இந்நிலையில், கியான்வாபி வழக்கை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4 வரை ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகே மற்ற மனுக்கள் கவனத்தில் கொள்ளப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.