states

img

பாசிச எதிர்ப்பாளர் பவுலண்ட்சாஸ்

கிரேக்க-பிரெஞ்சு மார்க்சிய அரசியல் சமூகவியலாளர் மற்றும் தத்துவவாதியான நிகோஸ் பவுலண்ட்சாஸ், 1936 செப்.21 அன்று கிரேக்கத்தில் பிறந்தார். கிரேக்கத்தில் சட்டம் பயின்ற நிகோஸ், 1961 இல் பிரான்சுக்கு இடம்பெயர்ந்தார். இங்கு 1964இல் சட்டத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், பாரிஸ் 8 (Paris VIII) பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பித்தார். தொடக்கத்தில் லெனினிஸ்டாக இருந்த இவர், பின்னர் ஜனநாயக சோசலிசத்தின் ஆதரவாளர் ஆனார். தத்துவார்த்தப் பணிகளில் மிகவும் பிரபலமானவர் என்றாலும், பாசிசம், நவீன உலகில் சமூக வர்க்கங்கள் மற்றும் 1970-களில் தெற்கு ஐரோப்பிய சர்வாதிகாரங் களின் வீழ்ச்சி குறித்த பகுப்பாய்வுகளோடு சேர்த்து மார்க்சியத்தையும் ஆராய்ந்தார். மார்க்சிஸ்ட் கோட்பாட்டா ளர் பாப் ஜெஸ்ஸாப்-உடன் நட்பு கொண்டிருந்தார். பாசிசத்தின் கூறான கலாச்சார மேலாதிக்கத்தை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிப்பதை அந்தோனியோ கிராம்சி போல எதிர்த்தார். அரசு மூலம் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு, தனது சொந்த நலனுக்காக மட்டுமே செயல்பட்ட முதலாளித்துவ வர்க்க அரசை பவுலண்ட்சாஸ் கடுமையாக எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், 1979 அக்.3 இல் காலமானார்.

 இன்று தோழர் நிகோஸ் பவுலண்ட்சாஸ் நினைவு தினம்