ஷில்லாங், மார்ச் 23 - மேகாலயாவில் சட்டப்பேரவையில் ஆளுநர் இந்தியில் உரையாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களோடு, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிலரும் ஒன்றாக கைகோர்த்தது மேகாலயா சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மாதம்தான் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளி லும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களி லும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களி லும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்தது. இதை யடுத்து கான்ராட் சங்மாவே மீண்டும் முதல்வ ராக பதவி ஏற்றார். இந்நிலையில், மார்ச் 20 அன்று சட்டப்பேர வையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய நிலையில், ஆண்டின் முதல் கூட்டம் என்ற வகையில், ஆளுநர் பாகு சவுகான் உரையாற்ற வந்தார். மேலும், கடந்த பிப்ரவரியில் ஆளுந ராக பொறுப்பேற்ற சவுகானுக்கு, இது முதல் உரை என்ற வகையில், அனைவரும் ஆவலு டன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மேகாலயா மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ள நிலையில், ஆளு நர் பாகு சவுகான், திடீரென இந்தியில் உரை யாற்றத் தொடங்கியது எம்எல்ஏ-க்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மக்களின் குரல் (Voice of People’s Party) கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் குழு ஆளுநரின் பேச்சை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் ‘எங்களுக்கு புரியும் மொழி யில் அவையில் பேச வேண்டும்’ என விபிபி கட்சி எம்எல்ஏ அர்டெண்ட் மில்லர் குரல் கொடுத் தார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்எல்ஏ-க்கள் குரல் கொடுத்தனர். “மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழி களை 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். அசாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அசாம் மொழித் திணிப் பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவா னது. இந்நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் ஆளுநர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும்?” என கேள்வி எழுப்பினர். “மேகாலயா மாநிலம், இந்தி மொழி பேசுகிற மக்களைக் கொண்ட மாநிலம் அல்ல. இம்மாநிலத்தில் தனித்துவமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆகையால் எங்களுக்கு புரிந்த மாநில மொழிகளில்தான் ஆளுநர் உரை யாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தினர். “மேகாலயா மக்கள் மீது மத்திய அரசால் இந்தி யை திணிக்க முடியாது” என்றும் கூறினார்.
ஆனால், பாஜக தயவில் முதல்வராகியுள்ள முதல்வர் கான்ராட் கே சங்மா, தேர்ந்தெடுக்கப் பட்ட மூத்த எம்எல்ஏ-விடம் இருந்து இதுபோன்ற நடத்தை எதிர்பார்க்கப்படவில்லை என்று கூறி விட்டு, ஆளுநர் பாகு சவுகான் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்பதும் சாத்திய மற்றது என்று கூறிவிட்டார். சபாநாயகர் தாமஸ் ஏ சங்மாவும் இதையே கூறினார். அப்போது, ஒரு நபர் தனது தாய்மொழியில் பேசுவதற்கு சட்டப்பேரவையின் விதிகள் அனு மதிக்கின்றன என்றாலும், எம்எல்ஏ-க்களுக்கு ஆளுநரின் உரை எழுத்துப்பூர்வமாக ஆங்கி லத்தில் வழங்கப்பட்டாலும், ஆளுநரின் இந்தி மொழியைப் பின்பற்றுவது கடினமாக இருப்ப தாக, ஆளும் என்பிபி கட்சியைச் சேர்ந்தவ ரும், சுகாதார அமைச்சருமான அம்பரீன் லிங்டோ வும் ஒப்புக் கொண்டார். எனினும், இதனை ஏற்க மறுத்த 4 எம்எல்ஏ-க்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த னர். அப்போது, “இந்தி பேசும் ஆளுநர்களை எங்கள் மாநிலத்துக்கு நியமிக்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்தி பேசாத மாநில சட்டப்பேரவையில் ஒரு ஆளுநர் இந்தி மொழியில் பேசுகிறார். அது தங்களது மாநிலத்துக்கு அவமானம் என நினைக்க வேண்டும். அப்படியான தன்மான உணர்வு இருப்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றும் தெரிவித்தனர்.