காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுதல் ஆகியவற்றை பாஜக செய்து முடித்துவிட்டது. மூன்றாவதாக பொதுசிவில் சட்டம் மட்டுமே, அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பாக்கி உள்ளது.
புதுதில்லி, ஜூன் 16 - பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு சரிவராது; அது தேவையும் இல்லை என்று 21-வது சட்ட ஆணையம், மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிக்கை தாக்கல் செய்துவிட்ட நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களி டம் மீண்டும் கருத்துக் கேட்பு நடத்துவ தாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்து ள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம், கடந்த 2018-ஆம் ஆண்டு, 185 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், “நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை; தற் போதைய சூழலில் அது விரும்பத்தக்க தும் அல்ல!” என்று தெரிவித்திருந்தது. “பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவது, நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு முரணாக அமையும். நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டு க்கு அச்சுறுத்தல் ஆகிவிடும்” என்று 21 -ஆவது சட்ட ஆணையத்தின் அறிக்கை யில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. “இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்டாடப்படுவது அவசியம்; கொண்டாடப்படவேண்டும். சமூகத்தின் பலவீனமான குழுக்கள் தங்களுக்கான சலுகைகளை இழக்கக் கூடாது. முரண்பாடுகளுக்குத் தீர்வு என்பது அனைத்து வேறுபாடுகளை யும் நீக்குவது அல்ல. வேறுபாடு களை அங்கீகரிப்பதை நோக்கி பெரும்பாலான நாடுகள் நகர்கின்றன. வேறுபாடுகள் இருப்பு பாகுபாட்டைக் குறிக்காது. வலுவான ஜன நாயகத்தையே குறிக்கும்” என்றும் கூறியிருந்தது.
திருமணம், விவாகரத்து தொடர் பான சட்டங்கள் சிலவற்றை மட்டும் பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரை அளித்திருந்தது. ஆனால், 21-ஆவது சட்ட ஆணை யம் வழங்கிய பரிந்துரையை புறக் கணித்துவிட்ட ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கருத்துக் கேட்கப் போவதாக அறி வித்துள்ளது. நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமை யிலான 22-ஆவது சட்ட ஆணையம் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துக்களைத் தெரி விக்கலாம்” என்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற் போது புதிதாக கருத்துகள் கேட்கப் படுவதாகவும், ஏனெனில், இந்த 3 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசா ரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதால், புதிதாக கருத்து கேட்பு நடத்துவது அவசியமாவதாகவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, கருத்துகளைத் தெரி விக்க விரும்புபவர்கள் சட்ட ஆணை யத்திற்கு அதன் உறுப்பினர் - செய லரின் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப் பட்ட முறையிலோ அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலோ தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary--lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரி விக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், சமயங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியத்தை, பொது சிவில் சட்டம் குலைத்துவிடும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே ஆபத்தாக முடிந்து விடும் என்று வரலாற்று ஆய்வா ளர்கள், அரசியல் தலைவர்கள் தொட ர்ந்து எச்சரித்தும், பொது சிவில் கொண்டு வருவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுதல் ஆகியவற்றை பாஜக செய்து முடித்து விட்டது. மூன்றாவதாக பொது சிவில் சட்டம் மட்டுமே, அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பாக்கி உள்ளது. இந்நிலையில், இதனையும் 2024 மக்கள வை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தி விட மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதற் காகவே, 2018-இல் 21-ஆவது சட்ட ஆணையம் வழங்கிய பரிந்துரையை ஒதுக்கிவிட்டு, மீண்டும் கருத்துக் கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து கண்டனங்களும் எழ ஆரம்பித்துள்ளது. “பொது சிவில் சட்டம் தொடர்பாக 21-ஆவது சட்ட ஆணையம் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘பொது சிவில் சட்டம் தேவை யானதும் அல்ல; தற்போதைய நிலை யில் விரும்பத்தக்கதும் அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்வது, தேர்தல் தோல்வி களில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி. மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜக-வின் செயல்திட்டத்தை நியாயப் படுத்தவே இந்த கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.