states

நேருவை விமர்சிக்கலாம்; ஆனால் அவரைப் பற்றிய பொய்யைப் பரப்ப யாருக்கும் உரிமை இல்லை!

புதுதில்லி, அக். 18 - “நாட்டின் முதல் பிரதமர் நேருவை யாரும் விமர்சிக்கலாம்; அதற்காக, இந்தியாவிற்கு அவர் செய்த தியாகத்தை மறைத்து பொய் களைப் பரப்புவதற்கு யாருக்கும் உரிமை யில்லை” என்று ராஜ்மோகன் காந்தி பேசியுள் ளார். மேலும், ``நேரு ஒரு முஸ்லிம் என்று கூறு கிறார்கள். ஒருவேளை நேரு முஸ்லிமாகவே இருந்தால்தான் என்ன? அதில் என்ன குற்றம் வந்து விட்டது?” என்றும் ராஜ்மோகன் காந்தி கேட்டுள்ளார். இமாசலப் பிரதேச மாநிலம், கசௌலி நகரில் ‘குஷ்வந்த் சிங் லிட்ஃபெஸ்ட்’(Khushwant Singh Litfest) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பேரனும், வரலாற்று ஆய் வாளருமான ராஜ்மோகன் காந்தி இந்நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா  மொய்த்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது:

“ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று இன்னும் கூட பல வெள்ளை அமெரிக்கர் கள் நம்புகிறார்கள். இப்படித்தான் கோடிக் கணக்கான இந்தியர்கள் மோதிலால் நேரு ஒரு முஸ்லிம் என்று நம்பத் தொடங்கினர். இந்தப் பொய், பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வரு கிறது. நேரு முஸ்லிமாக இருந்தாலும், இல்லை யென்றாலும் அதில் குற்றமில்லை. உங்கள் மூதா தையர் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதால் ஒருவரைக் கொல்லவோ, தண்டிக்கவோ அல்லது குற்றம் சாட்டவோ முடியாது.  நாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தில் நேரு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனு பவித்தார். இதை யாராலும் மறக்க முடியாது. உண்மையில் 14 ஆண்டுகள் என்பது நீண்ட  காலம். அவர் விடுவிக்கப்பட்ட கொஞ்சக் காலத் திலேயே அவரது மனைவி இறந்துவிட்டார். நேரு ஒரு நல்ல மனிதர். பெரிய மனிதர். மிகுந்த  புத்திசாலி. அவர் இமயமலையை மிகவும் நேசித்தார். தற்போது அவர் குறித்துப் பரப் பப்படும் பொய்களைக் கேட்டால் இமயமலை யும், பூமியும்கூட எதிர்ப்பு தெரிவிக்கும். நீங்கள் அவருடைய கொள்கைகளை விமர்சிக்க லாம். ஆனால் பொய்யைப் பரப்ப உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதை நினைத் தாலே எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. காந்திக்கு இப்போது பிரச்சனையில்லை. காந்தி பாதுகாப்பாக இருக்கிறார்.. அவர் எப்போது உயிருடன் இல்லை என்று அறி விக்கப்பட்டதோ, அப்போதிருந்துதான் காந்தி பாதுகாப்பாக இருக்கிறார். 

காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் நமது வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க வில்லை என்று அவர்களைக் குறை கூறு கிறோம்.. நமது காலத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்றும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறோம். இது அநியாயம் என்றே நான் நினைக்கிறேன்.  இங்கு அனைவரும் மனிதர்கள்தான். சில பிரச்சனைகளை நாமாகவே தீர்க்க வேண்டும். நாம் காந்தியின் தவறுகளில் கவனம்  செலுத்தக்கூடாது. சரி, காந்தி 1,000 தவறு களைச் செய்தார் என்று வைத்துக் கொள்ள லாம். காந்தி, நேரு மற்றும் படேல் இணைந்து 10,000 தவறுகள் செய்துள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர்களின் கொள்கைகள் என்ன? அதைப் பற்றி நாம் பார்க்க வேண்டும். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.  ஆனால், இங்குப் பல மோசமான சம்பவங்கள் இப்போது நடக்கின்றன. இதில் மேலும் சோகமான விஷயம் என்னவென்றால் பல அறிவார்ந்தவர்கள் இதைக் கண்டு அமைதி யாக இருக்கிறார்கள். மவுனம் ஒரு அற்புத மான நற்பண்புதான். ஆனால் நீங்கள் செல்வாக்குமிக்க நபராக இருக்கும்போது அப்படி இருக்கக் கூடாது.”  இவ்வாறு ராஜ்மோகன் காந்தி பேசியுள்ளார்.