states

img

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து முழு அடைப்பு: 529 ரயில்கள் நிறுத்தம்

புதுதில்லி, ஜூன் 20-  அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்  ளது. சுமார் 500 ரயில்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னி  பாதை’ திட்டத்தை ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதி ராக நாடு முழுவதும் போராட்டம் தீவி ரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கை விடக் கோரி பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்  முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், திங்களன்று, அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக் கப்பட்டது. அதன்படி நாட்டின் பல பகுதி களிலும் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. நாடு முழுவதும் 500 ரயில் களை ஒன்றிய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. தெலுங்கானா, ஹரியானா, மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காவல் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தில்லியில் இளைஞர் காங்கிரசார் ரயில் பாதையை மறித்து ரயிலை நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை எதிர்த்து ஏற்கெனவே போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் தொண்டர்கள் அக்னி பாதை விவகாரத்தையும் கையில் எடுத்து ரயில் மறியல் நடத்தினர். தில்லி மட்டுமின்றி தேசிய தலை நகர் பகுதியான குருகிராம், நொய்டா  போன்ற இடங்களிலும் போராட்டம் காரணமாக பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்றன. ஜார்க்கண்ட் மாநி லத்தில் அனைத்து கல்வி நிறுவனங்க ளும் மூடப்பட்டுள்ளன.  உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்  பட்டன. மேற்குவங்கத்தில் போர்க்கள மான ஹவுராவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹரியானாவில் பரிதாபாத், ரோதக் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங் கள் திங்களன்றும் தொடர்ந்தன. ஹரி யானாவில் உள்ள அம்பாலா, ரேவாரி  மற்றும் சோனிபட் மற்றும் பஞ்சாபில்  உள்ள லூதியானா, ஜலந்தர் மற்றும்  அமிர்தசரஸ் உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.