புதுதில்லி, ஜூன் 5- மண்வளம் குறித்து நமது விவசாயி கள் அறிந்து இருக்கவில்லை. இப்பிரச்சனை யை போக்க, நாட்டில் உள்ள விவசாயிக ளுக்கு மண்வள அட்டை வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது என்றார் பிரதமர் மோடி. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஞாயிறன்று நடைபெற்ற மண்ணைக் காப்போம் இயக்கம் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை யாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசிய தாவது;- பருவ நிலை மாறுபாட்டில் இந்தியா பங்கு தவிர்க்க முடியாதது என்று இருக்கும் பட்சத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கரியமிலவாயு பெருமளவு வெளி யேற்றப்படுவதற்கு வளர்ந்த நாடுகள் தான் பொறுப்பு. கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாது காப்பிற்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு முன்பாக மண்வளம் குறித்து நமது விவசாயிகள் அறிந்து இருக்கவில்லை. இப்பிரச்சனையை போக்க, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என நடப்பு பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். 13 நதி களின் புத்துயிர் திட்டத்தை தொடங்கி யுள்ளோம். வனப்பகுதியை 7,400 சதுர கிலோமீட்டருக்கு மேல் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியா இன்று பின்பற்றி வரும் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு கள் தொடர்பான கொள்கைகள் மூலம், வனவிலங்குகள் எண்ணிக்கை சாதனை படைக்கும் அளவு அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோலில் பத்து சதவீத எத்த னால் கலக்கும் திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு முன்பாகவே இந்தியா எட்டி யுள்ளது என்றார்.