புதுதில்லி,பிப்.24- நாடு முழுவதும் நடப்பாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வு களை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காரணமாக, கடந்த ஆண்டு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததும் கல்விநிலையங் கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன. இதையடுத்து, ஆண்டு இறுதித்தேர்வுகள் நேரடித்தேர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்வு நடத்த தடை விதிக்கக் கோரி குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமை யிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறி ஞர், பல பள்ளிகளில் வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை.
சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன, அப்படி இருக்கும்போது நேரடி தேர்வை மாண வர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், அது எங்களுக்கும் தெரியும் என்றதுடன், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக உரிய அமைப்புகள் முடிவு எடுக்கட்டும். தேர்வு தேதிகள், விதிமுறைகள் அறிவிக்கப்படும் முன்னரே இதுபோன்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரியல்ல என்று தெரிவித்தனர். மேலும், தேர்வுகள் உரிய விதி முறைகளின்படி நடைபெறாவிட்டால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய லாம். ஆனால், இதுபோன்ற பொதுநல மனு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற் படுத்தும். இந்த மனு மீது எந்தவித உத்தர வும் பிறப்பிக்க முடியாது. எவ்வித உத்தர வையும் பிறப்பிக்கப் போவதில்லை. இது போன்ற பொதுநல மனுவை எதிர்காலத்தில் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப் படும் என்று எச்சரித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.