அகர்தலா, மார்ச் 11- திரிபுராவில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி வரும் பாஜகவினரின் அட்டூழி யங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்றக் குழு தலைவர் எளமரம் கரீம் எச்சரிக்கை விடுத்தார். திரிபுராவில் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஊழியர்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மீதும் கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஆளும் பாஜகவினரின் அட்டூழியத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை நேரில் ஆய்வு செய்ய எளமரம் கரீம் தலை மையிலான எம்.பி.க்கள் குழு மார்ச் 10, 11 ஆம் தேதிகளில் திரிபுரா வந்திருந்தது. அங்கு நிலவும் நிலவரம் தொடர்பாக சனிக் கிழமை ஆளுநரை நேரில் சந்தித்து எம்.பிக்கள் குழு புகார் அளித்தது. பின்னர் எளமரம் கரீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த மாநிலத்தில் நடக்கும் தாக்குதல்கள், இதில் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு 10,11 தேதிகளில் திரிபுரா வந்தது. இதில் சிபிஐ(எம்), சிபிஐ, காங்கிரஸ் கட்சி களைச் சேர்ந்த 8 எம்பிக்கள் உள்ளனர். அதோடு எதிர்க் கட்சி தலைவர்கள், புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், போட்டி யிட்ட வேட்பாளர்கள் எங்களுடன் இருந்தனர். 3 குழுக்களாக தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு சென்றோம்.
றகு கொடூரமான மிருகத்தனமான தாக்கு தலை ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் எதிர்க் கட்சி ஊழியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள னர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இம்முறை மக்களின் வாழ் வாதாரங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல குடும்பங்களின் வாழ் வாதாரம் முற்றிலும் நாசப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் கொல்லப்பட்டனர். ரப்பர் தோட்டங் கள், ஆட்டோ, கடைகளை தீ வைத்து எரித் துள்ளனர். ஏராளமான வீடுகள் தகர்க்கப் பட்டுள்ளன. சில வீடுகள் பாதுகாப்பற்றது என கருதி கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இளை ஞர்கள் சிலர் உயிருக்கு அஞ்சி இந்த பகுதி களை விட்டு வெளியேறியுள்ளனர். அச்சத்து டன் மக்கள் வாழ்கிறார்கள். எங்களிடம் பலரும் தெரிவித்தது, அவர்கள் புகார்கள் அளித்தபோதிலும் காவல்துறை யினர் அவற்றை பதிவு செய்ய மறுத்துவிட்ட னர். மாறாக காயம் அடைந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திரிபுராவில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. அரசு இந்த அத்துமீறல் களுக்கு துணை நிற்கிறது. கடந்த தேர்தலில் 33 சதவிகிதம் மட்டும் வாக்குகளை பெற்ற பாஜகவுக்கு பெருமைப்பட ஒன்றும் இல்லை. 67 சதவிகிதம் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அந்த வாக்குகளை சிதற டித்ததால் மட்டுமே பாஜகவால் வெற்றிபெற முடிந்தது. அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளின் குரலை அடக்கி ஒடுக்குவது என்ப தற்கு உதாரணத்தை இன்று திரிபுராவில் பார்க்க முடிகிறது. இது நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளை நடத்தப்படலாம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களை அநியாயமாக கைது செய்வ தும், அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்படுவதும் நடக்கிறது. திரிபுரா அசாதாரணமான அநீதியான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாங்கள் முயற்சித்தோம். நாங்கள் நேரடி யாக கண்டவற்றை ஆளுநரை சந்தித்து தெரி விக்க இன்று (சனிக்கிழமை) காலை முயற் சித்தோம். இதில் தலையிட வேண்டும். இழப்பு கள் ஏற்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மறுவாழ்வு அளிக்கவும் நட வடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக்கொண் டோம். 13 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டம் நடக்க உள்ளது. இப்பிரச்சனைகளை அங்கு எழுப்ப நாங்கள் முயற்சிப்போம். நாட்டில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இந்த அநீதிகளுக்கு எதிராக அணிதிரட்டி போராடு வதுடன் திரிபுராவில் ஜனநாயகத்தை மீட்க வும் தொடர் முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
திரிபுரா வன்முறையை விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்
மக்களவையில் பி.ஆர்.நடராஜன் அளித்துள்ளார்
புதுதில்லி, மார்ச் 11- திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னர் இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பாஜக கும்பலால் வன்முறை வெறியாட்டங்கள் மேற் கொள்ளப்பட்டது தொடர்பாக விவாதித்திட வேண்டும் என்று கோரி மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மா னத்திற்கான நோட்டீசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர்.நட ராஜன் அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டா வது அமர்வு வரும் திங்கள் கிழமையன்று தொடங்கு கிறது. அன்றைய தினம், சமீபத்தில் திரிபுராவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றபின், பாஜக மிகச் சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தபின் னர், எதிர்க்கட்சியினர் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட் டன. குறிப்பாக திரிபுராவில் கமல்பூர், சாந்திர்பசார், பிசல்கார்க் முதலான இடங்களிலும் மற்றும் ஆயிரக்கணக்கான இடங்களிலும் வன்முறை வெறியாட்டங்கள் பாஜக குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஜனநாயகப் படுகொலை அங்கே நடை பெற்றுள்ளது. இவை குறித்து மக்களவை விவாதித்திட வேண்டும் என்று வலியுறுத்தி, பி.ஆர். நடராஜன் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கான நோட்டீசை மக்களவை யில் தாக்கல் செய்துள்ளார்.
திரிபுராவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுக!
பாஜக அட்டூழியத்திற்கு சீத்தாராம் யெச்சூரி கண்டனம்
புதுதில்லி, மார்ச் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவினரைத் திரிபுரா விற்கு அனுப்பியதற்கான முக்கிய கார ணம், தேர்தல் முடிவுகள் வெளியான தைத் தொடர்ந்து அங்கே ஒருவிதமான அராஜக நடவடிக்கைகளும், வன் முறை வெறியாட்டங்களும் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்றன. வன் முறை அரசியலை அங்கே பாஜக-வினர் அரங்கேற்றம் செய்திருக்கின்றனர். பாஜக, தங்களுக்குப் பெரிய அள வில் வெற்றி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனவே ஆத்திர மடைந்துள்ள அவர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெறி யாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். இது நாடு முழுதும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இத்தகைய சூழ் நிலையில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அங்கே செல்ல வேண்டும் என்றும், வன்முறையை நிறுத்திட நிர்ப் பந்தத்தை உருவாக்க வேண்டியது அவ சியம் என்று கருதினோம். மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தாமல், வன்முறையைக் கட்ட விழ்த்துவிடாமல் அரசாங்கத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று பாஜக கருதுகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக இதே பாணியில்தான் அவர் கள் அங்கே ஆட்சியை நடத்தி வந்தார் கள். அதேபோன்றே தொடர்ந்து ஆட்சி யை நடத்த வேண்டும் என்றும் விரும்பு கிறார்கள். அங்கே சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு, ஆளு நரைச் சந்திக்க முயலும். தலைமைச் செயலாளரையும் சந்திக்கும். அங்கே சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். திரிபுரா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார்கள். தூதுக்குழுவினர் திரும்பிவந்தபின் அவர்கள் ஓர்அறிக்கை தாக்கல் செய் வார்கள். மார்ச் 13 திங்கள் அன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இப்பிரச்சனையை எழுப்பு வார்கள்” என்று கூறினார்.