அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்
பதற்றமான சூழல்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள, அந்த மான் கடலில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதுதொ டர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”வெள்ளிக்கிழமை மாலை 6.27 மணிக்கு, அந்தமானில் கடலின் மைய த்தில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக் கத்தால் கட்டடங்களுக்கு பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவுமில்லை. பதற்றம் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளதால், அந்தமானில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. முன்ன தாக ஜூலை 13ஆம் தேதி மாலை 6.44 மணிக்கு அந்தமான் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.