புதுதில்லி,ஜன.1- ஒமைக்ரானால் கடந்த காலத்தைப்போல் மோச மான சூழல் ஏற்படாது.அதனால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று தில்லி எய்ம்ஸ் இயக்கு நரும் சிறந்த நுரையீரல் சிகிச்சை நிபுணருமான ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒமைக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்யும். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவர், பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும். அவருக்கு ஆக்சிஜன் குறைந்து மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளை ஒமைக்ரான் ஏற்படுத்தாது. தொற்று பரவலில் இருந்து நாம் முழுமையாக விடுபட வில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கவனமுடன் பின்பற்றுவதோடு விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. மக்கள் அச்சம் அடைய தேவை யில்லை என்று தெரிவித்துள்ளார்.