states

ரயில் பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாதீர்!

புதுதில்லி, ஜுன் 5 - சீர்திருத்தம் என்ற பெயரில் ரயில் பயணிகளின்  பாதுகாப்பில் சமரசம் செய்ய மோடி அரசை அனு மதிக்க முடியாது என்று சிஐடியு கூறியுள்ளது. இதுதொடர்பாக, சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  நமது நாட்டில் அண்மை கால வரலாற்றில் மிகவும் மோசமான ரயில் விபத்தாக ஒடிசா மாநி லத்தில் ஜுன் 2 அன்று நடந்த ரயில்  விபத்து உள்ளது. இந்த மிகப்பெரிய விபத்தில் நூற்றுக் கணக்கான பயணிகள் உயிர் இழந்தும், பலர் தங்களது உடல் உறுப்புகளை விபத்தில் இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு சிஐடியு சார்பில் ஆழ்ந்த இரங்கல் களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விழைகிறோம். தற்போது நடைபெற்ற பெரிய அளவிலான ரயில்வே விபத்துகள், நமது ரயில்வே துறையில் பராமரிப்பு பணிகளின் குறைபாடுகள் மற்றும் போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழல் மற்றும் விபத்து தடுப்பு மேலாண்மையின் குறைபாடு களை வெளிக்காட்டுவதாக உள்ளது. தற்போது ரயில்வே துறையானது. மிகவும் குறைந்த அளவு  பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இது விபத்து  தடுப்பு பிரிவுகள் மற்றும் ரயில்  வண்டிகளை இயக்கும் பிரிவுகளுக்கும்பொருந்தும். 

ஒன்றிய அரசின் சார்பில் பல ரயில்கள் பெயர்கள் மாற்றப்பட்டு இயக்கப்படுவது, ரயில்வே சேவைகளை விரிவாக்கம் செய்வது, ரயில் வேகத்தை அதிகரிப்பது போன்ற பணி கள் அதிகளவு விளம்பரத்துடன் மேற்கொள்ளப் பட்டாலும், அதற்கு தேவைப்படும் தர உயர்வு பணி கள், தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும்  தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் எந்தவித மான சமரசம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டி யது அவசியம். இதனை செய்யாத காரணத்தால் தான் இன்று மிகப்பெரிய அளவில் பல மனித உயிர்களைப் பலி  கொடுத்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு களை வழங்க வேண்டும்; இந்த மிகப்பெரிய விபத்துக்கான காரணத்தை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். மேலும் தற்போதைய கட்ட மைப்புகள்  பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த விபத்து மேலாண்மை மற்றும்  மனித வள மேலாண்மையில் போதிய அளவு கவனம் செலுத்தி அதற்கான பொறுப்பை; கொள்கை நடை முறைகளை மேற்கொள்ளும் போதும் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் போதும் செய்ய வேண்டியது அவசியம்.  ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே பணியாளர்களின் பாதுகாப்பில் மோடி அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் எந்த விதமான சமரசமும் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.