கே.வரதராசன் நகர்/திருச்சூர், டிச.16- சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட போதும், தலைகுனியாமல் இன்குலாப் என்று குரல் கொடுத்த மாவீரன் பகத்சிங்கின் ரத்தம் அதோடு நின்றுவிட வில்லை. திருச்சூரில் நடந்துவரும் விவசாயிகள் சங்க மாநாட்டு கருத்தரங்கில் அந்த மாவீரனின் வழித்தோன்றலான இரத்த உறவும் அதே போராட்ட குணமும் கொண்டவருமான பேராசிரியர் ஜக்மோகன் சிங் பங்கேற்றார். பகத்சிங்கின் சகோதரியும் போராளியுமான பீபி அமர்கவுரின் மகன் பேராசிரியர் ஜக்மோகன் சிங் (78). இவர், தொடர்ந்து உரிமைப் போராட்டங்களுக்கு ஆற்றலை அளித்து வருகிறார். ஆங்கில ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக துணிச்சலாக முழங்கியதற்காக அன்னை பீபி அமர்கவுர் ஒன்றரை வயது மகன் ஜக்மோக னுடன் சிறையில் அடைக்கப்பட்டார். 1945-46 இல், அவர் ஒன்பது மாதங்கள் அம்பாலா மத்திய சிறையில் கழித்தார்.
மேலும் பல கைதிகள் அவரை அரவணைக்க வந்தனர். அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏவின்) உறுப்பினர்கள் என்பதை பின்னர் அவர் தனது தாயிட மிருந்து அறிந்து கொண்டார். மாவீரன் பகத்சிங்கைப் பற்றி அவர், தனது தாயார் மூலம் அதிகம் அறிந்து கொண் டார். பகத்சிங் எப்போதும் அவரது இதயத்தில் இருக்கிறார். “சாதாரண மக்கள்தான் சக்தியைத் தருகிறார்கள். அவர்களுடன் துணை நிற்கிறேன். அதை புதிய தலைமுறையும் உணர வேண்டும்” என்கிறார் பேரா. ஜக்மோகன். ஜக்மோகன் தந்தை மக்கன்சிங், ஒரு விவசாயி. ஆனால் அம்மா போராட்டங்களில் ஈடுபடும் போது மனமாற ஆதரித்தார். பேரா.ஜக்மோகன் சிங் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். லூதியானாவில் உள்ள ஷாஹீத் பகத்சிங் படைப்பாற்றல் மையத்தின் இயக்குநராக இவர் உள்ளார். மனைவி: அமர் கவுர், குழந்தைகள்: ரவி (பொறியாளர்), மோகன்ஃப்ரீ (மருத்துவர்). விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக வியாழனன்று நடைபெற்ற உழவர் கருத்தர ங்கில் பிரகாஷ் காரத்துடன் ஜக்மோகன் பங்கேற்றார்.