states

img

ராமநவமி வன்முறையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் வீடு, கடைகள் இடிப்பு!

போபால், ஏப்.12- சங்-பரிவார் அமைப்புகள், ராம  நவமியன்று, நாடு முழுவதும் முஸ் லிம் பகுதிகளில் வன்முறையை அரங்கேற்றினர். வீடுகள், கடை களை தீவைத்து எரித்தனர். இந்த சம்பவங்களில் நூற்றுக்கும் மேற் பட்டோர் காயம் அடைந்ததுடன், 2 பேர் உயிரிழந்தனர்.  குறிப்பாக, ம.பி. மாநிலம் தலாப் சவுக், கவுசாலா மார்க், தபாடி சவுக், சஞ்சய் நகர் மற்றும் மோட்டிபுரா பகுதிகளில் ஏழை முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப் பட்டன. போலீஸ் வாகனம் ஒன்றும் எரித்து சம்பலாக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கோன் மாவட்ட எஸ்பி சித்தார்த் சவுத்ரியின் கால் களில் காயம் ஏற்பட்டது. சீருடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள்,

இங்குள்ள பிலால் மசூதியின் நுழைவாயிலை உடைத்து, அங்கிருந்த மூதாட்டி ஒரு வரையும் கடுமையாகத் தாக்கினர்.  இதனிடையே, ம.பி. மாநில காவல்துறையானது, சங்-பரிவாரங் களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே தற்போது 70 பேர் வரை கைது செய்திருப்பதுடன், கார்கோன் மாவட்ட நிர்வாகம் ராம நவமிக்கு மறுநாள் முஸ்லிம்களின் வீடு, கடைகளை இடித்துத் தரை மட்டம் ஆக்கியுள்ளது. இதுகுறித்து கார்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரகா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடைகள், வீடுகள் இடிப்பு என்பது இந்து முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சி அல்ல. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மக்களின் வீடுகளையும் கடைகளை யுமே இடித்துள்ளோம். 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இடித்துள்ளோம். ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்களை காலி செய் யும்படி சட்டபடி நேரம் கொடுத்தும் அவர்கள் காலி செய்யவில்லை. அத னால் இடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த நடவடிக்கைக்கும் ராம நவமி கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் சமாளித்துள் ளார்.