states

பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதா?

புதுதில்லி, மார்ச் 23 - பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டியது தொடர்பாக, தில்லி காவல்துறை 100 முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளது. மேலும், இதுதொடர்பாக 6 பேர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டிகளில், “மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ” (மோடியை அகற்றி நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற வாசகம் இடம் பெற்றிருந்தன.  இது தில்லியில் பரபரப்பை ஏற்படு த்திய நிலையில், நகரம் முழுவதும் ஒட்டப் பட்டிருந்த சுமார் 2000 சுவரொட்டிகளை போலீசார் தற்போது அகற்றியுள்ளனர். மேலும், சுவரொட்டி சம்பவத்திற்காக மட்டும் 100 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக, செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்திருக்கும் சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர பதக், “நகர் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பும் சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக போலீ சார் 100 வழக்குகள் பதிவு செய்துள்ள னர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வேன் ஒன்றை மறித்து போலீசார் சோதனை செய்தபோது, அதி லிருந்த ஆட்சேபத்திற்குரிய 2000 சுவரொட்டி கள் கைப்பற்றப்பட்டதுடன், வேனில் இருந்த வர்களும் கைது செய்யப்பட்டனர்” என்று கூறி யுள்ள சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர  பதக், “கைதான நபரிடம் விசாரித்தபோது, ஆம் ஆத்மியின் தலைமையகத்தில் சுவ ரொட்டிகளை வழங்குமாறு தனது முதலாளி தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி ஒரு நாள் முன்னதாகவே டெலி வரி செய்ததாகவும் கூறியதாக தெரி வித்தார்” என்றார். இரண்டு அச்சக நிறுவனங்களுக்கு தலா 50 ஆயிரம் சுவரொட்டிகளுக்கான ஆர்டர் கள் வழங்கப்பட்டன, அதன்படி இந்த நிறு வனங்களுடன் தொடர்புடைய தொழி லாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்று கூறும் காவல்துறை வட்டாரங்கள், சுவரொட்டிகள் அச்சிடப்பட்ட அச்சகம், அதன் உரிமையாளர்கள் தொடர் பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. முன்னதாக, கொரோனா தொற்றுப் பரவலின்போதும், தடுப்பூசி வழங்காதது தொடர்பாக, இதேபோன்று மோடியை விமர்சிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக அப்போது, 24 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு,  30 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.