states

மகளிர் கட்டணமில்லா பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

புதுதில்லி, மே 20 - மகளிர்க்கான கட்டணமில்லாப் பேருந்துகளை நிறுத்தங்க ளில் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு, மகளிர்க்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.  அண்மையில், தில்லியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில், பெண்கள் கைகாட்டி மறித்தும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் இயக்கினார். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், “குறிப்பிட்ட அந்த ஓட்டுநருக்கு தண்டனை வழங்கப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார். “மகளிர்க்கு பயணம் இலவசம் என்பதால் சில ஓட்டுநர்கள் பெண்களை பார்த்ததும் பேருந்தை நிறுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதை சற்றும் பொறுத்துக்கொள்ள முடி யாது. இந்த பேருந்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது” என கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். பகுதி தனியார்மயமாகும் பேருந்து சேவை மறுபுறத்தில் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர பொருளாதார வசதி படைத்த மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறேன் என்ற பெயரில், இந்த மாதத் துவக்கத்தில் தனியார் பிரீமியம் பேருந்து சேவை திட்டத்தை அறிவித்த கெஜ்ரிவால், இந்த பிரிமீயம் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். மகளிர்க்கு கட்டணச் சலுகை அளிக்கப்படாது என்று கூறியுள்ளார்.  “இந்த பிரீமியம் பேருந்துகள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும். வை-பை (Wi-Fi), (ஜிபிஎஸ்) GPS, சிசிடிவி (CCTV) மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில், ஆபத்துக்கால பொத் தான் (‘Panic Button’) வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கட்டணத்தை தனியார் நிறுவனங்களே முடிவு செய்யும். எனி னும் அரசுப் பேருந்துக் கட்டணத்தை விட, பிரீமியம் பேருந்துக் கட்டணம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே தனியாருக்கு விதிக்கப்படும்” என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.