ஐ.நா. குழு எச்சரிக்கை நியூயார்க், மார்ச்.7- சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கா விட்டால் பூமிப்பந்து கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை யின் சுற்றுச்சூழல் அறிவியல் குழு எச்ச ரித்துள்ளது. இது குறித்து அந்தக்குழு ஒரு விரி வான அறிக்கையை தயார் செய்திருக்கி றது. 3,675 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், சுற்றுச்சூழல் மாற் றங்கள் நம்மை சுற்றி வளைத்துள்ளது. ஆனால் அதிலிருந்து விடுபட மனித குலம் இன்னும் தன்னைத் தயார் செய்து கொள்ளவில்லை. இந்த மாற்றங்க ளால் கிட்டத்தட்ட உலக மக்கள் தொகை யில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்படும் அபாயத்தில் உள்ளனர். பெரிய அளவிலான எதிர் நடவடிக்கை கள் நம்மிடமிருந்து தேவைப்படுகிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டு கிறது. இந்த அறிக்கை பற்றிக் கருத்து தெரி வித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், “மாற்றங்களை எதிர் கொள்ள நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
அது உயிர்களைக் காப்பாற்றும். சுற்றுச்சூழல் பாதிப்பு கள் மோசமானால் நம்மைப் பாது காக்க முதலீடுகள் அதிகரிப்பது அவ சியமாக இருக்கும். பாதிப்புகள் அதிக ரிக்கவே செய்யும். தாமதம் என்பது மரணத்திற்கு சமம்” என்றார். சூடாகி வரும் பூமிப்பந்தில் மனித குலம் நீடித்து நிற்க வேண்டுமானால், அந்த வெப்பத்தில் வாழவும் தயாராக வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. அதேவேளையில், அத்தகைய ஏற்பாடுகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அனைத்து நாடுகளாலும் அதைச் செய்ய இயலாது. குறிப்பாக, கட லோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். வெப்பம் அதிகரிக்கும் பகுதிகளை குளிர வைக்கும் நடவ டிக்கைகள் தேவை என்றும் சுட்டிக் காட்டுகிறது. நூற்றுக்கணக்கான தாவரம் மற்றும் விலங்கு வகைகள் இந்த பூமியில் இருந்து மறைந்துவிட்டன. கடல் மட்டம் உயர்ந்ததால் ஆஸ்திரேலியா வின் பிராம்பிள் தீவில் வசித்து வந்த எலிகள் அழிந்தே போய்விட்டன. இந்த எலி வகை உயிரினம் அழிந்துவிட்ட தாக பிப்ரவரி 18, 2018 அன்று ஆஸ்தி ரேலியா அறிவித்தது. கடலின் வள மான பவளப்பாறைகளும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த சவாலை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் ஆய்வுக்குழு வின் இணைத்தலைவரான ஹான்ஸ் ஓட்டோ போர்ட்னர் கூறியுள்ளார்.