states

img

உத்தரகண்டில் உடனடியாக பொது சிவில் சட்டம்!

டேராடூன், மார்ச் 12 - உத்தரகண்டில் உடனடியாக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று, சட்டப்பேர வைத் தேர்தலில் தோற்றுப் போன முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைப் போலவே, உத்தரகண்டிலும் பெருவாரியான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. மொத் தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களை வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இதில், பாஜக-வின் சோகம் என்னவென்றால், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவர் போட்டியிட்ட ஹதிமா தொகுதி யில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரி டம் தோற்றுப்போனதுதான். ஆனால், புஷ்கர் சிங் தாமிக்கு அதைப்பற்றிய சோகம் எல்லாம் இல்லை. “ஆட்சியைத் தக்கவைத் துள்ள பாஜக, இந்த முறை பதவி யேற்ற உடனேயே பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும்” என புஷ்கர் சிங் தாமி பேசியுள்ளார். “உத்தரகண்ட் இந்தியாவின் ஆன்மீக ஆன்மா. இரண்டு முக்கிய வெளிநாடுகளின் எல்லைகளை கொண்டுள்ள உத்தரகண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்துவது என்பது மிக முக்கியமானது. இங்கு பாது காப்பு படையினர் பலரும் வசிக்கின்றனர். இது நாட்டின் ஆன்மாவின், ஆன்மீக உறை விடமாகவும் திகழ்கிறது. எனவே, இந்த மண்ணில் அனைவ ருக்கும் பொதுவான சட்டம் இருப்பதே சரியானது. அத னால்தான், இதை நிறைவேற்ற வேண்டும் என்கிறோம்” என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.