states

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க தொடர் போராட்டம்

புதுதில்லி, மே 18 - போக்குவரத்துத் தொழிலாளர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்க ளையும் பாதுகாத்திட, போக்குவரத்துத் துறையையும் பாதுகாத்திடுவோம் என்று தலைநகர் புதுதில்லியில் ஞாயிறு (மே 14) அன்று நடைபெற்ற அகில இந்திய சாலைப் போக்குவரத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. சிறப்பு மாநாட்டிற்கு கே.கே.திவாகரன், தரம்வீர் சௌத்ரி, நாகராஜன் தலைமை ஏற்றனர். நிர்மால் சிங் தலிவால், ஆர். லெட்சுமையா, எஸ்.கே.ராய், சம்பத் ஆகியோர் உரையாற்றினார்கள். சிஐடியு சார்பில் அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், ஏஐடியுசி சார்பில் கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரகடனம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. பிரகடனத்தில் விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்கள் வருமாறு: 1. ஜூன், ஜூலை மாதத்தில் மாநில அளவில் சிறப்பு மாநாடுகள் நடத்துவது.

2. மத்தியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசாங்கத்தின் தொழி லாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடைபெற்ற ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டிட அறைகூவல் விடுத்திருக்கி றது. அன்றையதினம் அவ்வியக்கத்தை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்திட, அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் அதில் பங்கேற்றிட வேண்டும். 3. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வியக் கம் வெற்றிபெறக்கூடிய விதத்தில், மாநில அளவில் ஒருங்கிணைப் புக்குழுவில் அங்கம் வகிக்கும் தலைமைகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு வதற்கான தேதி, இடம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.   ஒருங்கிணைப்புக்குழுவால் விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்கள் அனைத்தையும் வெற்றி பெறச்செய்திட வேண்டும் என்று அனைத்து சாலைப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுத்தது.             (ந.நி.)