புதுதில்லி, ஆக. 9 - பிரதமரை அவைக்கு வர வைப்ப தற்கே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டியிருந்தது ஒரு வரலாற்று அவமானமே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தது. மோடி அரசு மீதான நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஏ.எம். ஆரிப் செவ்வா யன்று மக்களவையில் ஆற்றிய உரை வருமாறு: வரலாற்றில் முதல்முறையாக இந்தியப் பிரதமரை நாடாளு மன்றத்துக்கு வரவழைப்பதற்காக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது ஆளுங் கட்சி முழுமையாக தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை நிரா கரித்து, உச்சநீதிமன்றமே மணிப்பூர் நிர்வாகத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். பிரதமர் அவைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேரை, அவையை ஒட்டியிருந்த தனது அறையில் கூட்டி, நாட்டைப் பிளவுபடுத்தும் தேர்த லில் எப்படி வெற்றி பெறுவது என்று ஆலோசனை நடத்துபவராக பிரதமர் மோடி இருக்கிறார்.
முதலைக் கண்ணீர்
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான ‘டைம்’ இந்திய பிரதமரை பிரிவினையின் தலைவர் என வர்ணித்துள்ளது. ரோமானியப் பேரரசு வீழ்ந்தபோது பிடில் வாசித்த நீரோ சக்கரவர்த்தியுடன் இந்தியப் பிரதமரை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல ஊடகங்கள் ஒப்பிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் பேசியதை ‘முதலைக் கண்ணீர்’ என டெலிகிராப் நாளிதழ் குறிப்பிட்டது. அதனாலேயே பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்தும், கோபமடைந்தும் அவர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை. இந்த அரசு மக்கள் மீது ஒற்றை சிவில் சட்டத்தை திணிக்க முயல்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போல், பாபர் மசூதி யை இடித்தது போல், தற்போது, இந்திய தொல்லியல் துறையுடன், ஞானவாபி மசூதியையும் இடிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மதுரா விலும் மசூதிகளை இடிக்க முயற்சிப்ப தாக பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குகளுக் காக நாட்டை எரிப்பதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
ஈ.டி. (Enforcement Directorate - ED) எனப்படும் அமலாக்க இயக்குநர கம், ‘எலெக்சன் டியூட்டி’ (Election Duty) என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. வரவிருக்கும் 2024 தேர்தலை எதிர்கொள்ள ஈ.டி. (ED) தனது பணியை ஏற்கெனவே தொடங்கிவிட் டது. சஞ்சய் குமார் மிஸ்ராவை அம லாக்கத்துறை இயக்குநராக வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தாலும், எதிர்க்கட்சிகள் பாஜகவை வலுவாக எதிர்கொள்ளும். பினராயி விஜயன் தலைமை யிலான, கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசைக் கவிழ்க்க கடந்த தேர்தலின் போது, ஒன்றிய அரசு 9 மத்திய அமைப்பு களை கேரளத்திற்கு அனுப்பியது. ஆயினும்கூட, இதுபோன்ற உண்மையல்லாத முயற்சிகள் மக்க ளின் தீர்ப்பை பாதிக்காது என்பதும் கேரளத்தில் நிரூபிக்கப்பட்டது. இப்போது ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே சகிக்க முடி யாதவராக பிரதமர் மாறியிருக்கிறார். முன்பு, ‘மேக் இன் இந்தியா, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்றவர், தற்போது பதிலாக ‘கிழக்கிந்திய கம்பெனி’, ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ என்று கூறுகிறார். “Quit India” என்பது பிரதமரின் புதிய முழக்கமாக உள்ளது. ஆனால், இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கத்தின் மூலம், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயர் களை இந்தியாவை விட்டு விரட்டி யடித்ததையும், அப்போது, ஆர்எஸ் எஸ் தலைவர்கள் சுதந்திரப் போராட்ட த்துக்கு எதிராக இருந்தார்கள் என்பதையும் பிரதமர் புரிந்துகொள்ள வில்லை. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தனக்குள்ள பெரும்பான்மை பலத்தின் மூலம் பாஜக அரசால் தோற்கடிக்க முடியும். ஆனால், இந்திய மக்களின் பலத்தால், வரும் காலத்தில் உண்மை யான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.